காவிரி பாலம் சீரமைப்பு; போக்குவரத்துக்கு தடை



மேட்டூர்: மேட்டூர் அணை அடிவாரம், காவிரி குறுக்கே, 1928ல் பாலம் கட்டப்பட்டது. இது கட்டி, 90 ஆண்டுக்கு மேலானதால் பலவீன-மானது. இதனால் லாரி, பல்கர் உள்ளிட்ட கனரக வாகனங்கள், பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, அனல்மின் நிலையம் வழியே சுற்றிச்செல்கின்றன. சிறு கார்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றன. அங்கு இரு நாட்களாக, வாக-னங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் மூலம், பாலத்தில் தார்ச்சாலை, இருபுறமும் உள்ள தடுப்பு கம்பிகளை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி முடிந்-ததும், மீண்டும் போக்குவரத்து தொடங்கும் என, நெடுஞ்சாலைத்-துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement