2025ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!
நமது சிறப்பு நிருபர்
2025ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் சவுதி அரேபியாவில் இருந்து தான் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2025ம் ஆண்டில் 81 நாடுகளில் இருந்து 24,600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் இருந்து 11 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த ஆண்டில் பிற நாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை விபரம் பின்வருமாறு:
1. சவுதி அரேபியா-11 ஆயிரம் பேர்
2.அமெரிக்கா-3,800 பேர்
3.மியான்மர்- 1,591 பேர்
4.மலேசியா- 1485 பேர்
5. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- 1469 பேர்
6. பஹ்ரைன்- 764 பேர்
7. மலேசியா-1,485 பேர்
8.தாய்லாந்து- 481 பேர்
9. கம்போடியா-305 பேர்
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வளைகுடா நாடுகளில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கான பொதுவான காரணம் விசா அனுமதி காலத்தை மீறி தங்குதல், உரிய அனுமதி ஏதும் பெறாமல் பணி புரிதல், தொழிலாளர்கள் விதிமுறைகளை மீறுதல், முதலாளிகளை ஏமாற்றிவிட்டு தப்பி செல்வது, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது தான். வளைகுடா நாடுகளில் கட்டுமான துறையில் வேலை செய்வதற்கு இந்தியாவில் இருந்து அதிகமானோர் செல்கின்றனர்.
@quote@
அவர்களில் பலர் ஏஜென்ட் மூலம் சென்று பல சந்தர்ப்பங்களில் கூடுதல் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, நாடு கடத்தும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். வெளிநாட்டில் உரிய ஆவணம் இன்றி போலீசாரிடம் பிடிபட்டவுடன் அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். quote மியான்மர் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதற்கு வேறு காரணங்கள் உள்ளன.
இந்த நாடுகள், இணையத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளின் முக்கிய மையங்களாக உருவெடுத்துள்ளன. அங்கு இந்தியர்கள் அதிக ஊதியம் தரப்படும் என்ற வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள்; அல்லது ஏமாற்றி அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு மோசடி கும்பல்கள் கையில், அடிமைகளாக சிக்கிய நிலையில் சட்டவிரோத வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அத்தகைய நிலையில் பிடிபடுவோர், நாடு கடத்தப்படுகிறார்கள்.
எனவே, வெளிநாடுகளில் தரையிறங்குவதற்கு முன்பு, தொழிலாளர்கள் விதிகள் குறித்து விழிப்புணர்வு பெறுவது முக்கியம். தங்கள் விசா காலக்கெடுவை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். உள்ளூர் விதிகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க எப்போதும் ஒரு வழி தான் உள்ளது. எனவே மிகவும் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் மற்ற நாட்டு தூதரங்கங்களைப்போல வலிமை உள்ளது அல்ல. இந்திய தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்றால் இந்திய தூதரகம் சிறப்பாக உதவுவதில்லை.
அமேரிக்கா பிலிபைன்ஸ் நாட்டு தூதரங்கங்கள் தங்கள் நாட்டு தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்றால் உடனே உதவுவார்கள். சவூதி அரேபியாவில் நிறைய கம்பனிகள் நம்மவர்கள் நடத்தும் கம்பனிகள் கூட தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கொடுப்பதில்லை, இக்கம்மா தங்கும் உரிமம் புதிப்பிப்பதில்லை. ஐயோ பாவம். கேட்க நாதி இல்லை. விசாவுக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு இன்ஜினியரிங் டிகிரி படித்துவிட்டு work permit receiver வேலைக்கு 1500 ரியால் 35000 ரூபாய் சம்பளத்திற்கு வந்து வேலை பார்க்கிறார்கள். நம் மாநிலத்தில் 500 க்கும் அதிகமான இன்ஜினியரிங் காலேஜ்கள் இருப்பதால் படித்து முடித்தபின் வேலை கிடைக்காததாலும் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வருகிறார்கள். நம் மாநிலத்தை ஆளுகிறவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் ஊழல் செய்வதில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர வேலை வாய்ப்புகளுக்கு வழி செய்வதில்லை. எதோ எடப்பாடி உதவியினாலும் கொரோனா உதவியினாலும் ஓன்லைன் மூலமாக தேர்வு எழுதி 30, 40 அரியர் வைத்தவர்களும் BE பட்டம் பெற்றுவிட்டனர்.
வெளிநாடுகளுக்கு வேலை செய்ய போகிறவர்கள் பணத்தாசை பிடித்தவர்கள் இதில் அரசாங்கங்களை குறை சொல்ல என்ன இருக்கு பங்களாதேஷத்தில் இருந்து வந்த கள்ளக்குடியேறிகள் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் வழைக்கிறார்கள் உங்களால் ஏன் முடியாது
அவர்களின் சட்டத்தின்படி, நாம் அனைவரும் வெளிநாட்டினர், அவர்களின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீறுபவர்களை நாடு கடத்துவார்கள்.
அதனால்தான் நாம் நமது வேலையைச் செய்ய வேண்டும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. அவர்கள் தங்கள் சட்டங்களை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்துகிறார்கள்.
அவர்களின் சட்டத்தின்படி, நாம் அனைவரும் வெளிநாட்டினர், அவர்களின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீறுபவர்களை நாடு கடத்துவார்கள்.
ஆகையால் நாம் நமது வேலையைச் செய்ய வேண்டும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. அவர்கள் தங்கள் சட்டங்களை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்துகிறார்கள்.
Saudi Arabia has coordinated vigilance force with complete power. They can enter any place to raid the illegals. They will arrest overstayers easily better than other countries.
இதுல அவிங்க பர்சண்டேஜ் ?
வெற்றி வெற்றி வெற்றி... இந்தியா முதலிடம்... அல்லது இவிங்க பொறந்தப்ப காங் ஆட்சி அதனால் எங்க கம்பெனி காரணம் இல்லை....
அவர்களே அதன் விபரத்தையும் கூறியுள்ளனர். அங்கு விசாவின் பங்கு மிகவும் அவசியம். அதுவும் எந்த வேலை காரணமாக விசா அளிக்கப்பட்டுள்ளதோ அதை மட்டும் தான் செய்ய வேண்டும். பலர் வளைகுடா நாடுகளுக்கு போர்மேன், டிரைவர் என்கிற பெயரில் செல்கின்றனர். ஆனால் செய்வது காய்கறி, பழம், மற்ற வியாபாரங்களை சொந்தமாக தொடங்கி வருகிறார்கள். அது அங்கு தவறு. விசா காலம் முடிந்ததும் அவர்களால் திரும்ப வரமுடியாத சூழ்நிலைகளில் கட்டிடப் பணியாளர்களாக வேலை செய்து மாட்டிக் கொள்கின்றனர். இதுவும் தவறு. இந்தியாவில் தான் பாகிஸ்தானி, பங்களாதேசி, மியன்மார் ரோஹாங்கியா போன்றவர்கள் சுதந்திரமாக இந்தியாவில் நுழைந்து எதுவும் செய்யலாம். அவர்களை கைது செய்தாலோ, அரசு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்தாலோ உன்னைப் போன்றவர்கள் கத்தி கூப்பாடு போட்டு கலவரம் செய்வது. இவர்களுக்கு ஆதார், வேட்பாளர் அட்டை, ரேசன் கார்டு வாங்கித் தர ஒரு கூட்டமே வேலை செய்கிறது. அது அங்கே நடைபெறாது. இங்கு தான் சிறுபான்மை, ஓட்டு வங்கி அரசியல் என்றெல்லாம் கூவலாம். அங்கு அனைவரும் இந்தியர்கள். அவ்வளவுதான்.
இவ்ளோ வியாக்யானமா பேசும் உன்னை போன்றவர்கள் இந்த மாதிரி வெளிநாட்டு வேலைக்கு போக மத்திய அரசின் துறைகளில் அனுமதியுடன் தான் போகனும்... அதேபோல் பர்மா பங்களாதேஷ் பார்டர்களை பாதுகாப்பதும் மத்திய அரசின் படைகள் தான்... அதனால் ப்ராப்ளத்தை அனுமதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கனும்னு சொல்லமாட்டாய்...
அந்நிய தேசத்திலிருந்து 24600 இந்தியர்களை நாடு கடத்தினார்கள்.... சரி.....நம் நாட்டிலிருந்து அந்நிய தேசத்தவர் எத்தனை பேரை நாடு நடத்தினோம்
சார் பாமரனுக்கு கள்ளக்குடியேறி இந்தியாவிற்கு எவ்வளவு பேரு வேணாலும் வரலாம் . இது தான் மடசம்ப்ராணி புத்தி. உள்ளவந்துட்டு அடாவடி செஞ்சி ஹிந்து பெண்களை மானபங்க வேலையை செய்வார்கள். இதை பார்த்துட்டு இந்திய சும்மா இருக்கணும் என எதிர்பார்க்கும் மூடர்கள் இன்னும் சொல்லப்போனால் ஈனப்பிறவிகள்.
அதான் ஓட்டு பிச்சைக்காரனுங்க கான்கிரேஸ் திருட்டு திராவிட மாடல் திரிணாமுல் கான்கிரேஸ் கட்சிகள் பொங்குறானுங்களே
இந்திய குடிமகனை நாடு கடத்துவது நமக்கு கேவலம் இல்லையா? வெளிநாட்டில் செய்யும் தவறு தான் நாடு கடத்த காரணம். இந்தியா வந்த பின் குடியுரிமை நீக்க முடியாதா? குற்றவாளி தேசிய குடிமகன் தகுதி இழக்க வேண்டும்..எல்லோருக்கும் ஓட்டு போடும் உரிமையில் நடுநிலையான கொள்கை வகுக்க முடியாது. அதிக, குறைந்த வாக்கு விகித எல்லை ஒரு அளவுகோல்.
அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் ஏமாற்றப்பட கூடாது... விசா எடுப்பதில் விழிப்புணர்வு அவசியம்மேலும்
-
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்
-
ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்
-
சென்னையில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள்; இன்று தூய்மை பணியாளர்கள் கைது
-
புழல் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் விடுதலை
-
விவசாயி வேடத்தில் நடக்கும் அரசியல்; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
-
மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை முதல்வர் வேடிக்கை பார்க்கலாமா: நயினார் கேள்வி