தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், வார விடுமுறை நாளான இன்று, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில பக்தர்களும் குவிந்தனர்.
கோவிலில், ஆறு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் வந்த வாகனங்கள், பார்க்கிங் செய்ய இடமின்றி, தேரடி வீதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டன.
இதனால் திருவண்ணாமலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆட்டோக்களில் ஒரு கிலோ மீட்டருக்கு, 100 ரூபாய் வீதம் கட்டணமாக நிர்ணயித்து, கிரிவலம் செல்லும் பக்தர்களிடம், 14 கி.மீ., துாரத்திற்கு, 2,000 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை வசூலித்தனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
Advertisement
Advertisement