சேதமான மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரிக்கை
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, சேதமான மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டியை இடிந்து விட்டு, புதிதாக கட்ட, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், எர்ர-ணஹள்ளி பஞ்., ரெட்டியூர் ஏரி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்-றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டி கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டபட்ட நிலையில், கடந்த, 2013ல் மறு சீர-மைப்பு பணி செய்தனர்.
அதை தொடர்ந்து, நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதி, துாண் மற்றும் உட்பட பல இடங்களில் சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்-டியின் கான்கிரீட் மற்றும் கம்பிகள் பெயர்ந்துள்-ளது. எனவே, சேதமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு, புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்ட, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்