வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை: ஸ்டாலினுக்கு சொல்கிறார் அண்ணாமலை
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பதவியிழந்து வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தி.மு.க. மகளிரணி மாநாடு நேற்று நடந்தது. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு பஸ்களில் திமுகவினர் அழைத்துவரப்பட்டனர்.
பயணிகளுக்காக இயக்கப்பட வேண்டிய அரசு பஸ்கள் இப்படி, அரசியல் கட்சி மாநாட்டுக்கு திருப்பி விடப்பட்டதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர்.
பஸ்கள் வராமல் பயணிகள் பல மணி நேரம் வேதனையுடன் காத்திருக்கும் படங்கள் தினமலர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகின. இணையத்திலும் நெட்டிசன்கள் திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர். தினமலர் சமூக வலைதளத்தில், 1. பயணிகள் அவதி, 2. காத்திருந்து… காத்திருந்து, 3. வந்த இடத்தில் லாபம் பாக்கனும்ல… என்ற தலைப்பில், படத்துடன் 3 செய்திகள் கார்டாக வெளியிடப்பட்டு இருந்தது.
இதனை மேற்கோள் காட்டி, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்களை நம்பி ஓட்டளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதற்கான விலையை இன்று மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நிரந்தரமாக வீட்டிற்கு செல்ல வேண்டிய நாள் இனி வெகுதூரத்தில் இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
தினமலர் சமூக வலைதள பக்கங்களில் வெளியான செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள் வாசகர்களே!
Work from home ah???
ada pongapappa.....
திருவள்ளூர் அருகே நடந்த கொடூரம் அனுதினமும் இப்போது தமிழகத்தில் நடக்கும் காட்சிகளில் ஒன்று ஆயிரம் சோற்றுக்கு ஒரு பதம் என்பதுபோல் ஆயிரம் வெட்டுக்கு ஒரு வெட்டு இந்த காட்சி
" முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்." இது செய்தி. இதில், " முதல்வர் ஸ்டாலின் " என்பதற்குப் பக்கத்தில் ஒரு "," ஒரு கமா போடாதது வேறு பொருள் தருகிறது. இதை படிக்கும் யாராவது, " முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு , செல்லும் நாள் " என்று படிக்காமல் இருந்தால் சரியே.
அவர் தினமும் தான் அறிவாலயத்தில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் வீட்டுக்கு செல்கிறார்
எங்கே ? மாமியார் வீட்டிற்கா?
கொள்ளைக்கார தலைவனின் உடன் பிறப்புக்களே , இதற்கு பதில் சொல்லுங்களேன் .
" கட்சி மாநாட்டுக்கு அரசு பஸ்களில் கட்சி கொடியை கட்டி அழைத்து சென்றதால் பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். .... தொடர் விடுமுறை, புத்தாண்டு காரணமாக வெளியூர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று காலை முதல் காத்திருந்தனர். நீலகிரியிலும் அரசு பஸ்கள், பல்லடம் திமுக மாநாட்டிற்காக அனுப்பப்பட்டதால் உள்ளூர் பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். நீலகிரியில் 165 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் 30க்கும் அதிகமான அரசு பஸ்கள் கட்சியினரை அழைத்து செல்ல கொண்டு செல்லப்பட்டதாக குன்னூர் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறினார்........" இந்த செய்தி இனிக்கிறதா வாலாட்டும் பிராணிகளே .
மாணவர்கள் அதற்கும் மேல் பள்ளி மாணவிகள் கஞ்சாவிற்கு டாஸ்மாக் ஆட்பட்டு சீரழிந்து கிடக்கிறார்கள், அரசு நிர்வாகத்தின் அத்தனை செயலர்களும் , ஆசிரியர்களும் செவிலியர்களும் போராட்டத்தில் இருக்கிறார்கள் .....ஐந்து வருடத்தில் அஞ்சரை லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.... 40,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி ....இப்படி ஒரு கேவல விடியல் அரசாங்கம் ....இதை சரி செய்ய துப்பில்லை ...
சீமான் போல் அரசின் அத்துமீறல்களை இடித்து சொல்வதற்கும் துணிச்சல் வேண்டும்..
மோடி சொன்ன 500 1000 நோட்டு செல்லாது என்ற சொன்னமாதிரி அன்னமலை பேச்சு அரங்கேறாது கானல் நீர் தான்
என்னமாதிரி டிசைன்
இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மாதிரி குண்டு கட்டா அண்ணாமலையை வண்டியில் ஏத்த முடியாது. ஏன்னா அவுரு இவன்களை வண்டியில் ஏத்தி புடுவாரு. கானல் நீர் தான்.
இப்படி சொல்லி சொல்லியே உன்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் எடபடியார் பாவந் உன் நிலை , சீமான் நீர் விஜய் எல்லாம் ஸ்ட்ரீட் fightersமேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்