குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
குன்னுார்: குன்னுார் கன்னிமாரியம்மன் கோவில் தெருவில் நள்ளிரவில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
குன்னுார் கன்னிமாரியம்மன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நேற்று முன்தினம் தனியாக வீட்டில் படுத்து உறங்கியுள்ளார்.
அதிகாலை, 4:00 மணியளவில் இவரின் வீட்டில் சமையலறை எரிந்ததை கண்டு அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று, தீயை அணைத்தனர்.
இதனால், மற்ற வீடுகளில் தீ பரவுவது தடுக்கப்பட்டது. அதில், 'வாகன டாகுமென்ட்' உட்பட சில பொருட்கள் எரிந்து சாம்பலாகின. காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 சரிவு
-
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
Advertisement
Advertisement