கஞ்சா புழக்கம் இல்லை எனக்கூறுவது மக்களுக்குச் செய்யும் துரோகம்: அண்ணாமலை
சென்னை : '' கஞ்சா புழக்கம் இல்லை என்று பேசுவது பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம், '' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் எங்கேயுமே கஞ்சா நடமாட்டமே இல்லை என்று கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் பேசியிருக்கிறார் திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன். முதல்வர் ஸ்டாலின் நடத்தும் நடைபயிற்சி ஷூட்டிங்கிற்கான ஏற்பாட்டிலேயே தனது முழு நேரத்தையும் செலவிடுவதால், அமைச்சருக்கு உண்மை நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நேற்று, திருத்தணியில், 17 வயது சிறுவர்கள், கஞ்சா போதையில் ஒரு வடமாநில இளைஞரை அரிவாளால் கடுமையாக வெட்டிய காணொளியை, அமைச்சர் பொய் என்கிறாரா? தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை, கடத்தல் மற்றும் வைத்திருப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
இந்த ஆண்டில் மட்டுமே, தூத்துக்குடியில் திமுக கவுன்சிலரின் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம், சென்னை, ஆவடி பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளது, கஞ்சா விற்பனை வழக்குகளில் சிறை தண்டனை விதித்து நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என, இவை அனைத்தும் நாம் நாள்தோறும் படிக்கும் செய்திகள்.
கோவையில் கல்லூரி மாணவர் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாணவர் விடுதிகள் வரை கஞ்சா விற்பனை ஊடுருவியிருப்பது, போதைப்பொருள் எவ்வளவு ஆழமாக தமிழகத்தில் பரவியுள்ளது என்பதற்கான நேரடி சாட்சி. கல்வி வளாகங்களே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது, கஞ்சா புழக்கம் இல்லை என்று பேசுவது பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம். கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்த திமுக அரசு, இன்று உண்மையை மறைத்து தப்பிக்க முயல்கிறது.
போதைப்பொருள் சட்ட ஒழுங்கு பிரச்சினை மட்டும் அல்ல. அது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் சமூகப் பேரழிவு. கஞ்சா கடத்துபவர்கள் மீதும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் முயற்சிப்பது வெட்கக்கேடு.
இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவர்கள் புழக்கத்தில் இல்லை என்று சொல்லவே இல்லை. கஞ்சா நடமாடாது என்று டெக்னிக்களாக சொன்னார்கள்.
அப்படியா சொல்லிகிறாரு
ஆமாங்க
Drug is an international problem,at france the govt is struggling hard to fight against drug trafficking. But no success.
The
என்னது தமிழ்நாட்டில் கஞ்சா குடிக்கிகள் இல்லையா!!!எவ்வளவு பச்சை பொய்....எப்படி துணிந்து இப்படியெல்லாம் பேசவருது திமுகவால்....
அண்ணாமலை சார், மக்களை மதுவில் இருந்து காப்பாற்ற அனைத்து டாஸ்மாக் கடைகளை மூடுவோம் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்ற மக்கள் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.
சிவநாயகம் இருநூறு வாங்காமாட்டேன் என்று சத்தியம் செய்யனும்...செய்வாயா....
வடக்கேருந்து வரும் கஞ்சா கடத்தலை தடுக்க துப்பில்லை.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 3 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்ப்பு .......இதை கண்டு, நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் பலரும் அதிர்ச்சி ..இந்த செடி வடக்கிலிருந்து நடந்து வந்ததா ..
அப்போ மத்திய அரசு கிட்ட பேசி
கஞ்சா விளையற மாநிலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க வைங்க அண்ணாமலை! வெறும் அறிக்கைகள் தமிழ்நாட்டிற்கு உதவாது?
மனசாட்சி இருந்தா செய்ங்க! நக்சல் ஒழிப்பெல்லாம் செய்யும் போது கஞ்சாவை மத்திய அரசு மூலமாக செய்ய முடியாதா?
ஜாபர் சாதிக் போன்ற பல பேர் திமுக வாதிகள். அரிசி பருப்பு கூட ரேஷனில் கிடைக்காமல் போகலாம் ஆனால் கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. சமூகம் எல்லோரையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த கஞ்சா புழக்கம் எப்ப தமிழ் நாட்டுக்கு வந்தது என்று அண்ணாமலைக்கு முதலில் தெரிவியுங்கள்!
Health minister is lying and he should be sackedமேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்