அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்; தலைமை செயலகத்தில் இன்று பேச்சு
சென்னை: காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ, போட்டோ - ஜியோ' நிர்வாகிகளுடன், அமைச்சர் எ.வ.வேலு, இன்று(ஜன.,2) பேச்சு நடத்த உள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ; அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான, போட்டோ - ஜியோ சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இரண்டு சங்கங்களும், ஜன., 6 முதல், மாநிலம் முழுதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. கடந்த 22ம் தேதி தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் தலைமையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு தனது அறையில், இன்று காலை 11:00 மணிக்கு, போட்டோ - ஜியோ நிர்வாகிகள், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் ஆகியோருடன், தனித்தனியே பேச்சு நடத்த உள்ளார்.
அரசிடம் இருக்கும் நிதியை மொத்தமாகத் துடைத்து இவர்களுக்கு அள்ளி வழங்கினாலும் விடியாது .......
காக்கா கூட்டம் ....
தலைவர் சொல்லிட்டார் இந்தியாவிலேயே நம்பர் 1. நம் தமிழ் நாடு என்று , எனவே உடன்பிறப்புகளே நீங்கள் மகிழ்ச்சியாக தேர்தல் வேலை பாருங்கள் , முரசொலி படியுங்கள் , டாஸ்மாக் கடைக்கு வருகை தாருங்கள் ,முடிந்தால் தெருவில் போவோரை வம்புக்கு இழுங்கள் , நானும் என் மகனும் என்னுடைய அடிமை கூட்டமும் உங்களை என்றும் பாதுகாக்கும்
ஆளக்கு ஒரு பெட்டி . பிரச்சினை முடிந்தது.
ஐ நா சபையில் பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடியாது
தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில், 1,050 பஸ்கள் இயக்கப் படுகின்றன. பஸ்களில் பிரேக், லைட், டயர்கள் எதுவும் சரியில்லை என்பதால், வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, டிரைவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனராம். அண்மையில், ராமநத்தம் அருகே பஸ் விபத்தில் சிக்கி, 10 பேர் உயிரிழந்ததற்கு, அந்த பஸ்சின் டயர் சரியில்லாதது தான் காரணமாம். இப்படி ஒரு படு கேவலமான ஆட்சி நடக்குது ....மேலும்
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்
-
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
-
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
2025 டிசம்பரில் கார் விற்பனை அமோகம்: ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிய சாதனை
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
-
மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு