ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களுடன் கேக் வெட்டிய எஸ்.பி.,

தர்மபுரி: ஆங்கில புத்தாண்டையொட்டி, தர்மபுரி நகரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், தர்மபுரி நான்கு ரோடு பகுதியில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, எஸ்.பி., மகேஸ்வரன் பொதுமக்களுடன் இணைந்து, ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement