ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ சான்று வழங்கல்
தேனி: அரசு கால்நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டிற்கு செல்லும் காளைகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காளைகளை உரிமையாளர், தங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
இதுபற்றி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன் கூறியதாவது: மாவட்டத்தில் 53 அரசு கால்நடை மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஜல்லிகட்டு காளைகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்கி வருகிறோம்.
கடந்தாண்டு சான்றிதழ் வாங்கிய காளைகளின் உரிமையாளர்கள் களைகளின் புகைப்படங்கள், தங்களின் ஆதார் நகல் சமர்பிக்க வேண்டும்.
புதிதாக சான்றிதழ் பெறுவோரும் ஆதார் நகலுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
மேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு