நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
ஆமதாபாத்: நாட்டின் தன்னம்பிக்கையை பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார் என தொழிலதிபர் முகேஷ் அம்பானி பாராட்டி உள்ளார்.
குஜராத்தில் நடந்த மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பாதையை மாற்றியமைத்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை இவ்வளவு நம்பிக்கை, தன்னம்பிக்கையை நாம் கண்டதில்லை.
நாட்டின் தன்னம்பிக்கையை பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார். இந்தியா புவிசார் அரசியல் கொந்தளிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது நரேந்திர மோடி என்ற வெல்ல முடியாத பாதுகாப்புச் சுவரைக் கொண்டுள்ளது.
புவிசார் அரசியல் சூழ்நிலை எதிர்பாராத சில கொந்தளிப்புகள் உட்பட புதிய சவால்களை உருவாக்குகிறது. இந்தியாவிற்கு உறுதியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த சவால்கள் நம் மக்களைத் தொடவோ அல்லது தொந்தரவு செய்யவோ முடியாது.
பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியா எதிர்காலத்திற்கு தயாராகி வருவது மட்டுமல்ல, அதை வடிவமைத்து வருகிறது.
2036ம் ஆண்டில் ஒலிம்பிக்கை ஆமதாபாத்தில் நடத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆதரிக்கும். ரிலையன்ஸ் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை இரட்டிப்பாக்கி ரூ.7 லட்சம் கோடியாக உயர்த்தும். ஒவ்வொரு குஜராத்திக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிவேக வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் அதிக செல்வத்தை உருவாக்குவோம் என்று இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.
மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பலப்பல லட்சம் கோடி கடன் தள்ளுபடியை வைத்து சொல்கிறார்.
முகேஷ் அவர்களே எங்க டமில் நாட்டு திராவிட மூடல் அரசுக்கு வேட்டு வைக்கும் மாதிரி பேச வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே மோடின்னா எல்லா பயலுவளுக்கு ஜுரம் வந்திடுமே.
உங்கள் சொத்து மதிப்பு 15 வருடத்தில் எவ்வளவு உயர்ந்து உள்ளது அது தான் இந்த தன்னம்பிக்கை உங்களுக்கு
முருகா ..திமுகவின் சொத்து நான்கு வருடத்தில் இருபது மடங்கு எப்படி
பாவம் டம்ளன். கோபாலபுர கொத்தடிமையில் இருந்து வெளியே வர வழியே இல்லை .மேலும்
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு