சென்னை மின்சார ரயில் மீது பாட்டில் வீச்சு; திடீர் பரபரப்பு
சென்னை: அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில் மீது வியாசர்பாடி அருகே மர்ம நபர்கள் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்தது.வியாசர்பாடி அருகே வந்தபோது மர்ம நபர்கள் ரயில் மீது பாட்டில்களை வீசினர். இதில் ரயிலில் பயணம் செய்த மூன்று பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
அவர்களுக்கு தலை மற்றும் கையில் பாட்டில் கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகளுக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வாசகர் கருத்து (1)
சாமானியன் - ,
05 ஜன,2026 - 17:52 Report Abuse
பாட்டிலை வீசுபவன் சந்தேகமில்லாமல் சைக்கோ. 0
0
Reply
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு; ஒப்புக்கொண்ட பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம் வெல்லும்; இந்து முன்னணி
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
Advertisement
Advertisement