திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம் வெல்லும்; இந்து முன்னணி
பல்லடம்: ''திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம், நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அவர் கூறியதாவது:திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த பின்னும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம், நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஹிந்துக்களுக்கு மட்டுமே விரோதமாக தி.மு.க., அரசு செயல்படுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்பட்ட தோல்வியை ஈடு செய்ய, திருப்பூர் அருகே உள்ள குமரன் குன்று கோவிலை தி.மு.க., அரசு இடித்து தள்ளியது. முருகப்பெருமான் முதல்வருக்கு தக்க பாடம் புகட்டுவார். சமீபத்தில், திருப்பரங்குன்றம் அருகில், முதல்வர் ஸ்டாலின் பயணித்த காரின் டயர் வெடித்தது. அவர் அமர்ந்திருந்த சீட்டில் பாம்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதெல்லாம் அவருக்கு எச்சரிக்கை மணி. முதல்வரின் மனைவி துர்கா, பயபக்தியுடன் சுவாமி கும்பிடுபவர். அவரது தெய்வபக்தி தான், முதல்வரை பாதுகாத்து வருகிறது. எங்கு வேண்டுமானாலும், சர்ச், மசூதி கட்டிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை இந்து முன்னணி கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஐயா மெத்த படித்தவர்களிடமும் இன்னும் அறியாமையும் ,அடிமைத்தனமும் விட்டுப்போகாததே இதெற்க்கெல்லாம் காரணம் .
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு , என்ற குரலை நம் நினைவில் கொள்ளை மறந்துவிட்டோம் .அரசியலமைப்பு சட்டத்திலும் சரி , மாநில அரசு சட்டத்திலும் சரி எல்லா வழிபாட்டுத்தலங்களையும் அரசு ஏற்று நடத்தும் சட்டம் இயற்றப்படவும் இல்லை,இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவுமில்லை .இதை 1954 யிலேயே உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டது . இதைப்பற்றிய விரிவான கட்டுரை விரைவில் தினமலரில் வரலாம் .எதிர்பாருங்கள் .இதற்கிடையில் அப்படி ஒரு சட்டம் இருப்பதாக யாராவது கண்டறிந்து தினமலரில் சட்டவரைமுறை அசல் வார்த்தைகளிலேயே பதிவிட்டால் அவர்களுக்கு ரூபாய் 10,000/ அன்பளிப்பாக அனுப்பிவைக்கின்றேன் ..
முருக பெருமான் நல் ஆசியுடன், விடியலுக்கு விடை கொடுப்போம்...மத மாறிகளா அல்லது மத மாறாதவர்களா...ஒரு கை பார்த்து விடுவோம்... ஜெய் ஹிந்த்...
விநாச காலே விபரித புத்தி என்பதை முற்றிலும் நடந்து வருகிறது இதில் இருக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை ஆட்சியோ இனி அம்போ இன்னுமா திருந்த வில்லை
ஹிந்து மக்கள் திருந்த ஒரு வாய்ப்பு 2026 எலேச்டின் விட்டு விடாதீர்கள்
தமிழ் நாட்டில் இந்த அளவுக்கு ஜாதி மத மோதல்கள் இல்லாமல் தமிழகத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு தமிழ் நாட்டில் அனைவரும் நிம்மதியாக வாழ மீண்டும் ஆதரிப்போம் , ☀☀☀மீண்டும் DMK 2.O
ஏலே திகழ் கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத
வெல்லும்போது பார்க்கலாம் இதை வெச்சி நல்ல COLLECTION நடக்குது என்ஜோய்மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்