மேல் முறையீடு... நீதிபதியை பதவி நீக்க கோரிக்கை; தமிழக அரசின் தவறான முடிவுகளுக்கு கிடைத்தது சம்மட்டி அடி
நமது நிருபர்
திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுகவினர் பார்லியில் மனு கொடுத்தனர். இத்தகைய செயல்பாடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்ற கிளை பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால், அதைச் செய்யாமல், தனக்குத்தானே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது தமிழக அரசு. தீர்ப்புக்கு மேல் முறையீடு, அதற்கும் மேல் முறையீடு என்று வழக்கு மேல் வழக்காக போட்டதே தவிர, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதாக இல்லை.
'தீபத்துாணில் தீபம் ஏற்றினால், இஸ்லாமியர்கள் தவறாக எண்ணிக் கொள்வார்களே, ஓட்டுக்கள் போய் விடுமே' என்ற கற்பனையான அச்சத்தில், திமுக அரசு தவறான முடிவுகளை எடுத்தது.
மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீதும் திமுகவினர் அவதுாறு பரப்பினர். கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு, அட்டூழியம் செய்தனர். பார்லிமென்டிலும் பிரச்னை கிளப்பினர்.
சம்மட்டி அடி
நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு திமுகவினரின் ஓட்டு வெறி உச்சத்துக்கு சென்றது. இத்தனைக்கும் தீர்ப்பு வெளியான நாளில், இஸ்லாமிய தரப்பில் இருந்து எந்த ஆட்சேபமும் எழவில்லை. அப்படி இருந்தும் திமுகவினர், இப்படி ஒரு மோசமான வேலையை செய்தனர். அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில், இப்போது இரு நீதிபதிகள் தீர்ப்பு அமைந்துள்ளது.
மிகத்தெளிவாக...!
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு செல்லும் என்றும், தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 'தனி நீதிபதி உத்தரவு போட்ட அன்றே தீபம் ஏற்றி இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை' என்று நீதிபதிகள் தீர்ப்பில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இது, தமிழக அரசுக்கும், அதன் தவறான முடிவுகளுக்கு ஜால்ரா அடித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் வைக்கப்பட்ட 'குட்டு' என்கின்றனர், மதுரை மக்கள்.
நல்லா கவனியுங்க 90 நாட்கள் வரை மேல்முறையீடு செய்யாமல் இழுத்தடிப்பாங்க ஏனென்றால் அதிலும் தோற்போம் என்று தெரியும் அதை கடைசி நேரத்தில் கடமைக்கு மேல்முறையீடு செய்துவிட்டு ஒட்டு பிச்சை எடுப்பாங்க. முன்னாடியே செய்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் என்ன செய்வது என்ற பயம்
கடவுளை உருவாக்கியவர்கள் கலவரக்காரர்கள் ஆக மாருவது ஆச்சரியம் இல்லை
மக்களை பிளவு படுத்துவது
நாட்டை பிளவு படுத்துவது
பக்தியை வைத்து பிழைப்பு நடத்துவதில் தினமும் தமிழகத்திற்கு புதிதல்ல
கோவில் நிலத்தில்,கோவில் விவகாரங்களில்,அந்நிய மதம் தலையீடு,இந்துக்கள் கொந்தளிப்பு,அந்நிய மதத்துக்கு திமுக,நம் மதத்துக்கு பாஜக,அந்நிய மதம் ஓட்டு எல்லாம் திமுக,நம் மதம் ஓட்டு,யாருக்கு?
இது கூட தெரியாதா? என்ன?? அதுவும் திமுகவிற்குத்தான்.
திமுக அரசு மேல்முறையீடு செய்தால் தேசிய அளவில் மீண்டும் பேசப்படும் விவகாரமாகிவிடும் ..... தேசிய அளவில் இண்டி கூட்டணிக்குச் சங்கடம் ..... தேசிய அளவில் ஹிந்து வாக்குவங்கி உருவாக இதுவும் ஒரு காரணமாகிவிடும் .....
பிரில்லியண்ட் ஸ்ரீ தெய்வசிகாமணி
இதற்குப் பிறகும் திராவிட மாடல் உச்ச நீதிமன்றம் செல்லும். அங்கேயும் செருப்படி படனும்.. அப்ப தான் எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றம் அணுகும் முறை நிற்க்கும். எவ்வளவு அடிச்சாலும் புத்தி வராது அந்த திராவிட மாடலுக்கு
திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் சேதத்தை இந்த மாநிலத்தை ஆளும் தீய சக்திதான் ஆதலால் அரசாங்க அதிகாரிகள் யாரையும் அதற்கு பழி வாங்க வேண்டாம் ஏனென்றால் அவர்கள் ஊழியர்கள் அரசு சொல்லத்தான் கேட்க வேண்டும் ஆதாலால் அவர்களை படுகுழிக்கு தள்ளி கேட்ட பெயரை வாங்கித்தந்த அரசைத்தான் கலைக்க வேண்டும் இது ஜனநாயகத்தில் ஒரு முன் உதாரணமாகும்
நீதிமன்றத்தை எதிர்த்து சித்து விளையாட்டு மூலம் சாதித்து விடலாம் என்ற பயித்தியக்காரத்தனத்துக்கு இன்னும் நீதிமன்றம் முழுவதுமாக முடிவு கட்டவில்லை. இன்னும் கூட திருந்தால் மேல்முறையீட்டுக்கு போவோம் என்று நீதித்துறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த தீம்க்காவை உச்ச நீதிமன்றம் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
The contempt petition pending in the High Court should be expedited and the cohorts in defying the order of Hon Judge should be given exemplary punishment to serve as a lesson to the other civil servants and officials and in due course they woud bend backwards to say I am At your S ervice and would cease to be His Masters Voice
திமுகவுடன் கூட்டு சேர்ந்த கட்சிகள் இப்போது என்ன செய்வார்கள்.மேலும்
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களே காரணம்: பிரதமர் மோடி பேச்சு
-
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்
-
சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட விமானத்தில் கோளாறு; பயணிகள் கடும் அவதி