மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது கொடுந்துயரம்; சீமான் சாடல்
ஈரோடு: திமுக - அதிமுக மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது கொடுந்துயரம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
ஈரோட்டில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: ஊழல் குறித்து மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். இது எவ்வளவு பெரிய கொடுந்துயரம் என்று பாருங்கள். திருவிழா காலத்தில் நடக்கும் நாடகம் போல இதுவும் நாடகம். இதனை பார்த்து சிரித்துவிட்டு போக வேண்டியது தான்.
அதிமுக பாமக கூட்டணி எதிர்பார்த்தது தான், இது ஒன்று தான் அவர்களுக்கு வாய்ப்பு. பிப்ரவரி 21ம் தேதி 234 தொகுதிகளுக்கு தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்போம்.
ஒவ்வொரு பொங்கலுக்கும் பணம் கொடுக்க விரும்பினால் போன பொங்கலுக்கு கொடுத்து இருக்க வேண்டும். இது பொய் பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கலாக இருக்கிறது. 30 லட்சம் மடிக்கணினியை இப்போது கொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது. இது மக்களுக்கான அரசியல் அல்ல.
ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு வாக்குறுதி அளித்திருப்பது என்பது அமைப்பை பலப்படுத்துவது, அங்கு இருக்கும் ஓட்டுக்கள் அவர்களுக்கு முக்கியம். தூய்மை பணியாளர்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
கஞ்சா பயன்பாடு அதிகரித்துவிட்டது. போதை கலாசாரம் அரசுக்கு தெரியாமல் எப்படி வருகிறது. அதுபற்றி பேச திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? அவர்கள் சாராயத்தை அங்கீகரித்து விற்பனை செய்கிறார்கள். விற்பனை குறைய கூடாது என்று நினைக்கிறார்கள். மாவட்ட கலெக்டர் விற்பனை மேலாளர்களை அழைத்து கூட்டம் போடுகிறார்.
அரசு பள்ளியில் படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது. இது குறித்து கவலைப்படாமல், குடிக்க வருபவர்கள் எண்ணிக்கை பற்றி கவலைப்படுவதா? போதை கலாசாரம் பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி, அருகதை இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.
திமுக, அதிமுகவினர் மட்டுமே திருடிக் கொண்டு இருப்பதா?. நா த க தும்பிகள் எப்போது திருடுவது, பதில் சொல்லுங்க மக்களே.
ஆரம்பகாலங்களில் பாலஸ்தீனத்தில் அப்பாஸ் கட்சியை பிரிவினைப்படுத்த, ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் ஊக்குவித்தது. அதன் பலனை ஒரு வருடத்திற்கு முன் அனுபவித்தது. அதே போன்று திமுகவை ஒழிக்க சீமானை ஊக்குவிப்பது ஆபத்தானது. முளையிலேயே கிள்ளியெறியவேண்டிய வன்முறை கும்பல்
சீமான் கருத்துக்களை மக்கள் ஏமாற்று கொள்கிறார்கள் ஒட்டு என்கின்ற போது திருடர்கலிய்ய ஆதரிக்கிறார்களெ?
நீங்களும் மாரி மாரி தான் காசு வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது கொடுந்துயரம் சீமான் சாடல். அதெல்லாம் இருக்கட்டும் ஒவ்வொரு தேர்தகளிலும் கட்டுமர திருட்டு திமுகவிற்கு எதிரான வாக்குகளை உன்னை பின் தொடரும் தற்குறி தும்பிகளை வைத்து எதிர் வாக்குகளை சிதைத்து மீண்டும் மீண்டும் கட்டுமர திருட்டு திமுக ஆட்சிக்கு வர உதவுகிறாயே, அதை எப்ப நிறுத்தப்போற?
lets give him a chance to wipe off completely
ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு தி மு க இல்லை இனாம் அன்பளிப்பு அல்ல அன்பளிப்பு நல்ல காரியங்களுக்கு மட்டும் கொடுக்கிறது .ஏற்றுக்கொள்பவர்கள் வாக்கு அளிக்கிறார்கள் ஸ்டாலின் அரசுக்கு செல்லவேண்டிய பாவம் இனாம் பெற்றவர்களுக்கு போய் சேருகிறது. இதில் ஆச்சரியம் என்ன என்றால் எதிர்த்து வாக்குஅளிக்க இருப்புவர்களும் இனாம் பெற்றுக்கொள்வதுதான். இது பல பிறவிகளிலும் தொடரும் இவர்கள் வேண்டாம் என்றால்தான் ஸ்டாலின் அரசு தோல்வியை நோக்கி செல்லும். இது அறிவுள்ள படிப்பினை.
புதுசா வர்ரவங்களுக்கு ஊழல் செய்ய ஒரு வாய்ப்பு கேக்குறாரோ?மேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு