சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்? அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க திட்டம்
புதுடில்லி: மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க, சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சீன நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் சீன நிறுவனங்கள், மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவிடம் பதிவு செய்து, அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
தற்போது எல்லை பதற்றம் தணிந்து, சீனாவுடன் துாதரக ரீதியிலான உறவு மேம்பட்டுள்ள நிலையில், வர்த்தக உறவுகளை மீட்டெடுக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
“சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. எனினும், பிரதமர் அலுவலகம்தான் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கும்.
திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும், உதிரிபாக பற்றாக்குறை நிலவுவதாகவும் பல்வேறு அரசு துறைகள் தெரிவித்ததையடுத்து, தடையை நீக்க பரிசீலிக்கப்பட்டுள்ளது,” என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதானி அம்பணி என்ற இரண்டு முதலாளிக்காக, மோடி எதுவும் செய்வார்,
அரசியல், பூகோள ரீதியாக சீனா, அமெரிக்கா இடையேயான பகை நமக்கு சீனாவுடனான பகையை விட அதிகம் .... இருந்தாலும் வர்த்தகம் என்று வந்தால் இணக்கத்தைப் பேணுகிறார்கள் .... ஆகவே மத்திய அரசு இப்படிப் பரிசீலிப்பதில் தவறில்லை .... தேவையும் இருக்கிறது ....
மத்திய அரசு தயங்குவதற்கு காரணம் முதலீடுகளை செய்து அவர்களின் உளவாளிகளை அந்த நிறுவனங்களில் அமர்த்தி விடுவார்கள் ...
சீனாவுடனான வர்த்தக அணுகுமுறையில் மத்திய அரசு சரியான முடிவுகளைத்தான் எடுத்து வருகிறது .... dependency உருவாக்குவதில் சீனா கில்லாடி .....
போனவாரம் வரைக்கும் சீன துரோகின்ன ? இப்போ என்ன வீட்ல விசேஷமா ? சீனாக்காரன் விட்டானா ?
வூட்ல விசேஷமா ? சீனாக்காரன் விட்டதில் பிரதிபலனோ ?
சீனாவின் முதலீடுகள் இந்தியாவில் இருந்தால் சீனா கொஞ்சம் பொறுப்பாக நடக்க வாய்ப்பு உண்டு
சீனாவுக்கு நெருக்கடியா.? இல்ல அமெரிக்காவுக்கு நெருக்கடியா.?
வேறு மாற்று வழி இருக்கும்... அதை பாரதம் நிச்சயம் பரிசீலிக்கும் ...சீன நிறுவனங்கள் மற்றும் சீன அரசு நம்பிக்கைக்கு உடையவர்கள் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் என நம்ப தோன்றவில்லை ...
நல்ல வெளியுறவு கொள்கை. தண்ணி மிஞ்சினா உப்பு. உப்பு மிஞ்சினா தண்ணி. இதுல உலகை வழி நடத்தும் விஸ்வகுருவாம்
ஜப்பானிய நிறுவனங்களை உள்ளே விடலாம். சீன நிறுவனங்களால் சீனாதான் வளரும்.
ஜப்பான் நிறுவனங்களுக்கு எவ்வித கட்டுப்படும் இதுவரை இல்லை ..ஆனால் உற்பத்தி துறையில் தற்போதைக்கு சீனாவை விட்டால் வேறு நாடும் இல்லை....
ஜப்பான் மட்டும் என்ன பெஷலா பண்ணுமாம் ...மேலும்
-
இன்று இனிதாக... (14.01.2026) பெங்களூரு
-
குடியரசு தின விழா காண பொது மக்களுக்கு இ - பாஸ் முறை அறிமுகம்
-
பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் வரும் 16ல், பொங்கல் விழா
-
ஜார்கண்ட் மாநிலத்தவரை தாக்கிய நான்கு பேர் கைது
-
சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்
-
ஜி.பி.ஏ., தேர்தலுக்கு பின் முதல்வர் மாற்றமா? காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் விவாதம்