குடியரசு தின விழா காண பொது மக்களுக்கு இ - பாஸ் முறை அறிமுகம்
பெங்களூரு: ''குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை காண, பொது மக்களுக்கு இ - பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,'' என, பெங்களூரு மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
நாட்டின், 77வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி, பெங்களூரு மானக் ஷா பரேடு மைதானத்தில் நடக்கிறது. இக்கொண்டாட்டத்தை காண, பொது மக்களுக்கு இ - பாஸ் முறை அறிமுகமாகி உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள், இன்று முதல் ஜன., 24ம் தேதி வரை மாலை 5:00 மணிக்குள், www.sevasindhu.karnataka.gov. in என்ற சேவா சிந்து இணையதளத்தில், தேவையான அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பதிந்து, இ - பாஸ் பெற்று கொள்ளலாம்.
இ - பாஸ் வைத்திருப்பவர்கள், அணிவகுப்பு மைதானத்தின் நுழைவு வாயில் எண் 5ன் வழியாக செல்லலாம்.
முன்னதாக, இ - பாஸ் பெற்றதற்கான அச்சிடப்பட்ட நகலையோ அல்லது டிஜிட்டல் (மொபைல்போனில்) நகலையோ வைத்திருக்க வேண்டும்.
இப்பதிவு செயல்முறை தொடர்பான உதவிக்கு, சேவாசிந்து இணையதளத்தில் உள்ள உதவி பகுதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்