மாநில சப் - ஜூனியர் கேரம் சென்னை வீரர்கள் பங்கேற்பு

சென்னை: கன்னியாகுமரியில் நேற்று துவங்கிய மாநில கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த 100க்கும் அதிகமான வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மற்றும் கன்னியாகுமரி கேரம் சங்கம் சார்பில், இருபாலருக்குமான மாநில சப் - ஜூனியர் கேரம் தர வரிசை சாம்பியன்ஷிப் போட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று துவங்கியது.

இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12, 14 மற்றும் ஓபன் பிரிவுகளில் 500க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாவட்ட கேரம் சங்கம் சார்பில் 12 வயதுக்கு உட்பட்ட கேடட் பிரிவில் 16 வீரர், 11 வீராங்கனையர்; 14 வயதுக்கு உட்பட்ட சப் - ஜூனியர் பிரிவில் 16 வீரர், 11 வீராங்கனையர் மற்றும் 14 வயதுக்கு மேற்பட்ட சீனியர் ஓபன் பிரிவில் 32 ஆண், 36 பெண்கள் என மொத்தம் 111 வீரர் - வீராங்கனையர் கலந்துகொண்டுள்ளனர். போட்டி முற்றிலும் தனிப்பிரிவில் நடக்கிறது.

Advertisement