குடியரசு தின விழாவில் பங்கேற்க தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு
கூடலூர்: டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, கூடலூர் சேர்ந்த தேயிலை தோட்ட பெண் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்து, அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் சளிவயல் நெல்லிகுன்னு பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. தேயிலை தோட்டத் தொழிலாளரான இவர், அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் பணியில் இருந்தவரை, தபால் துறை ஊழியர் சந்தித்து, 'குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வந்திருப்பதாக கூறி, அதற்கான அழைப்பிதழை அவரிடம் வழங்கினார்.
இந்திராணி இன்ப அதிர்ச்சியுடன் அழைப்பிதழை பெற்றுக்கொண்டார். இந்திராணி கூறுகையில், 'நான் கூடலூர், சளிவயல் கிராமத்தில் நெல்லிகுண்ணு பகுதியில் வசித்து வரும் ஒரு சாதாரண தேயிலை தோட்ட தின கூலி தொழிலாளி.
எனக்கு ஜனாதிபதியிடம் இருந்து குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் வந்துள்ளது. மிகவும் பின்தங்கிய கடைக்கோடி பகுதியில் வசிக்கும் எனக்கு, ஜனாதிபதியிடம் இருந்து, தபால் மூலம் அழைப்பிதழ் வந்திருப்பது வியப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் உள்ளது' என்றார்.
இது முழுமையான செய்தி இல்லை. இதுபோல் இதர மாநில ஏழை தொழிலாளிகள் பெற்று இருப்பார். இதனை நூலகங்கள் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் இது அரசியல் இல்லை என்று தெரியும். குடியரசு தலைவர் எவ்வாறு தேர்ந்து எடுக்கிறார் என்பதும் மக்களுக்கு தெரியவேண்டும். ஆளும் கட்சி நிர்பந்தம் இல்லை என்ற நிலைப்பாடு மக்கள் உணரமுடியும்.
இதுதான் பிஜேபியின் மக்கள் ஆட்சிமேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு