இடைநிலை ஆசிரியர்கள் 13வது நாள் போராட்டம்

கரூர்: கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், நேற்று 13வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டனர்.


அதில், தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடை-நிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும்; கடந்த, 2021ல், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நேற்று, 13வது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி உள்-பட, 20க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement