அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்
சென்னை: தலைநகர் சென்னைக்காக திமுக அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறது. அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் அமையவிருக்கும் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 1967ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன.
பொதுவாகவே பலருக்கு உண்மை தெரிந்தும், சிலருக்கு உண்மை தெரியாமலும் திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை என்று பெரிய பொய்யை கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் கருணாநிதி தமிழகத்தின் நீர்நிலைகளை காப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்திருக்கிறார்.
முக்கியம்
ஒரு நாட்டிற்கு நிதி மேலாண்மை போலவே, இப்பொழுது நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். அந்த நீர் மேலாண்மைக்கு மிக மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உணர்ந்து திமுக அரசு செயல்படுகிறது. நீர் நிலைகளை மாசுபடாமல் காத்து வருகிறோம். நிலத்தடி நீரை அதிகரிக்க எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறோம்.
கடல்நீரை குடிநீர் ஆக்கவும் முயற்சி செய்கிறோம். அரசு என்ன தான் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தாலும், மக்களுக்கும் இதில் கடமை இருக்கிறது. அதனால் தான் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் சிறப்பாக செயல்பட கூடியவர்களுக்கு விருதுகளை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறோம்.
மிகுந்த மகிழ்ச்சி
நீர்வளத்துறை பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இருக்க கூடிய கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளை சுத்தப்படுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நீண்ட கால பலன்களை பெறக்கூடிய வகையில், நிலையான நீர் மேலாண்மைகளை உறுதி செய்யக்கூடிய அரசு தன்னார்வல தொண்டு நிறுவனங்களை பாராட்டி இன்றைக்கு விருது வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தலைநகர் சென்னைக்காக திமுக அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறது. அடுத்தடுத்து நிறைய, வரிசையாக திறப்பு விழாக்கள் காத்திருக்கிறது. இன்றைக்கு நான் தொடங்கிய நீர் தேக்க பணி மக்களுக்கு வாழ்வளிக்க போகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஏன் கலைஞர் நீர்தேக்கம் என்று பெயரிடவில்லை? செல்லாது செல்லாது...
காவிரி நதி பொன்னி நதி பல ஆண்டுகளாக தூர் வாராமல் சிரிப்பாய் சிரிக்கிறது திருச்சியிலிருந்து திருவையாறு வரை காவிரி நதியில் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட மணல் தீவுகள் கணக்கிலடங்காது அதனால் பாதிப்பு என்னவென்றால் காவிரியின் இரு பக்க கரைகளும் தண்ணிரால் த்து அரைக்கப்பட்டு கரைகள் எல்லாமே உடைந்து விட்டன ஆங்காங்கே காவிரியின் நடுவில் அநேக தீவுகள் அமைந்துள்ளன எப்போது யார்தான் இந்த தீவுகளை அகற்றி காவிரி நன்றாக ஓடி கடைமடையை அடைய வழி வகுப்பார்களோ தெரியவில்லை
மற்சவரை இரையை பௌண்டடின் ஸ்டோன்ஸ் திறப்பார்..இன்று கூட வொன்று திறந்தார்,,,, ப்ராஜெக்ட் வருமா வராது என்று ட்ராவிடத்துக்குத்தான் [ பெரியார்] தெரியும். துண்டு போடலாமே.
எங்க மறுக்கா சொல்லு, எத்தனை அணை கட்டினீங்க? எப்புடி கட்டினீங்க? நம்ம சின்ராசு எப்பவுமே இப்படித்தான்...பொய் பொய்யா பேசிட்டு திரியுவாரு. திராவிட பரம்பரையே அப்புடிதான். வாங்க நாமெல்லாம் இவர்களை 2026ல தமிழ்நாட்டை விட்டு ஓட ஓட விரட்டிடலாம்.
அடுத்து அப்பாயிசம் ஆரம்பம்
அப்பா!அப்பா! அப்பப்பா! நீ அளந்த ரீல் போதுமப்பா! உன் ரீல் அறுந்து ரொம்ப நாள் ஆனதப்பா !
கேட்பவர்கள் அறிவற்றவர்களாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்பார்களாம்! நம்ம ஊரின் ஒரு கிராமத்துப் பழமொழியை நாகரிக நடையில் சொல்லி இருக்கிறேன்.
எலேச்டின் வந்திட்டா போதுமே.... நம்ம சின்ராச கையில பெட்டியை தூக்கிட்டு கெளம்பிடுவாரு. உள்ளாரா ஒரு சுக்கும் இருக்காது. வெறும் கையில் முழம் போடுவதில் வல்லவர்கள் இந்த திராவிட விடியல் கோமாளிகள்.
இப்போ திருந்து இருக்கின்ற சாராயக்கடைகளே போதுமே நாட்டைக்கெடுக்க .இன்னும் எந்த நாட்டைக்கெடுத்து கூட்டிசெவ்ருஅக்கபோகிண்றீர்கள்
Next no money to pay maintenance will shut automatically. This is rule of Lawமேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்