கிரீன்லாந்து மீது டென்மார்க் நாட்டுக்கு என்ன உரிமை இருக்கிறது; கேட்கிறார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: நோபல் பரிசு கிடைக்காததால் இனிமேல் முற்றிலும் அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. கிரீன்லாந்து மீது டென்மார்க் நாட்டுக்கு என்ன உரிமை இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் எட்டு போர்களை நிறுத்திவிட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், 2025ம் ஆண்டுக்கான பரிசு அவருக்கு வழங்கப்பட வில்லை. இருந்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து டிரம்ப் தொடர்ந்து புலம்பி வருகிறார்.
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோரிடம் அதிபர் டிரம்ப் தனது அதிருப்தியை கொட்டி தீர்த்து இருக்கிறார். அவர் நார்வே பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோருக்கு அனுப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது:
8 போர்களை நிறுத்தியதற்காக உங்கள் நாடு எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவது பற்றி பரிசீலிக்கவில்லை என்பதால் முற்றிலும் அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இல்லை. அமெரிக்காவிற்கு எது நல்லது என்பது பற்றி சிந்தித்தால் போதுமானது என்று நினைக்கிறேன்.
கிரீன்லாந்தை ரஷ்யா, சீனாவிடம் இருந்து டென்மார்க்கால் பாதுகாக்க முடியாது. கிரீன்லாந்து மீது உரிமை கொண்டாட டென்மார்க் நாட்டிற்கு என்ன காரணம் இருக்கிறது? எழுதப்பட்ட ஆவணங்கள் எதுவும் கிடையாது. சில நூறு ஆண்டுக்கு முன், அங்கு ஒரு படகு கரை சேர்ந்தது என்பதை தவிர டென்மார்க் நாட்டுக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்களது படகுகளும் தான் அங்கு சென்று கொண்டு இருக்கின்றன.
நான் மற்றவர்களை காட்டிலும் நேட்டோ கூட்டமைப்புக்கு நிறைய செய்து இருக்கிறேன். இப்பொழுது நே ட்டோ அமெரிக்காவிற்கு பதிலுக்கு ஏதாவது செய்து ஆக வேண்டும். அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் கிரீன்லாந்து வராத வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அந்தப் படகில் யாரும் வித்அவுட் டிக்கெட் பயணிக்கவில்லையா?
உலகின் எல்லா நாடுகளின் நடவடிக்கைகள் மீது உங்கள் மூக்கை நுழைப்பதற்கு யார் உரிமை கொடுத்தார்கள்? ராவணன் சகோதரி மூக்கு அறுபட்டதுபோல உங்கள் மூக்கும் அறுபடும்.
கிரீன்லாந்தை பாதுகாத்து வரும் அமெரிக்காவுக்குத்தான் சொந்தம். தூரத்தில் உள்ள டென்மார்க்குக்கு எந்த சம்பந்தமும் இல்லை. உழைப்பவன் ஒருவன். தின்பவன் வேறொருவனா? என்று ட்ரம்ப் கேட்பதில் அர்த்தம் உள்ளது.
வடிவேலு வச்சு நம்ப ஆளுங்க மீம்ஸ் போடுற மாதிரி...
அவங்க கனடா, கிரீன்லாந்து தான் NO சொல்றங்கள்ள..
கிரீன்லாந்து மீது அமெரிக்காவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று அதிபர் ட்ரம்ப் தெளிவாக சொல்ல வேண்டும்
ஆடும் வரை ஆட்டம்.....
டிரம்ப் நோபல் பரிசைவைத்து என்னபண்ணப்போறார், ஒரு நோபல் பரிசுக்கு எண்ணத்தகுதி இருக்கு என்று அவருக்கு புரியவையுங்க, 8 அல்ல 100 போரை நிறுத்தில்நால் மட்டும் போதாது, இளவயதில் இருந்து ஒருவருடைய கல்வி, நடத்தை, உழைப்பு எல்லாம் பார்க்கப்படும், ஒரு பெரிய வனசாத்திரம், விஞ்ஞாவளர்ச்சி விஞ்ஞானிக்கு நோபல் 2008இல் கொடுக்க இருந்தது, கடைசி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படவில்லை. காரணம் அவர் ஒர் ஓரின சேர்க்கையாளர் என்பதால் கொடுக்கப்படவில்லை, டிரம்ப்மீது பாலியல் வழக்கு, WWF குத்துசண்டை கழகத்திலும் வழக்குகள் இருந்தது. இதை சொல்லி நோபால் பரிசு கழகம் அறிக்கையை இவர் மூஞ்சியில் எறியனும்.
you are lying. no such thing happened. actually in 2022 svante paabo bisexual and carolyn bertozzi lesbian were given Nobel prize .They did not conceal their sexuality.
இன்னொருத்தருக்கு அவருடைய சாதனைக்காக வழங்கப் பட்ட நோபல் பரிசை அவரிடம் இருந்து தான் வாங்கிக் கொண்டு இவர் ஏதோ சாதனை செய்தது போல் சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கும் போதே தெரியவில்லையா? எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டு எதனையும் கைப்பற்ற நினைக்கும் நபர் என்று!
இதைக் கேட்ட உனக்கு என்ன உரிமை இருக்கிறது?
சண்டியர் என்ற எண்ணம் கொண்ட மண்டைக்கான பிடிக்க மோசமான அதிபர்மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்