வர்த்தகப் போர்கள் யாருக்கும் உதவாது; அதிபர் டிரம்புக்கு சொல்கிறார் பிரிட்டன் பிரதமர்
லண்டன்:வர்த்தகப் போர்கள் யாருக்கும் உதவாது என வரி விதிக்கும் அதிபர் டிரம்பின் முடிவுக்கு பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
கிரீன்லாந்தை ஆதரிக்கும் பிரிட்டன் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் அமெரிக்கா 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து, லண்டனில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நிருபர்களிடம் கூறியதாவது: வர்த்தகப் போர்கள் யாருக்கும் உதவாது.
கிரீன்லாந்தை கையகப்படுத்த அதன் நட்பு நாடுகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல் முற்றிலும் தவறானது. வர்த்தகப் போர் அனைத்து தரப்பினரையும் சேதப்படுத்தும்.
நட்பு நாடுகளுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்துவதற்கான யோசனையை நிராகரிக்கிறோம். வர்த்தக அச்சுறுத்தல்கள் மூலம் இறையாண்மை பிரச்னைகளை ஆணையிட முடியாது. கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் முடிவெடுக்கும் உரிமையை பிரிட்டன் ஆதரிக்கிறது. கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த முடிவுகள் அதன் மக்கள் மற்றும் டென்மார்க்கைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். வரி அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படக்கூடாது.
பிரிட்டன்-அமெரிக்க உறவு மிக முக்கியமானது. மேலும் அதை வலுவாகவும், ஆக்கப்பூர்வமாகவும், முடிவுகளில் கவனம் செலுத்தவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
பதட்டங்களைத் தணிக்க, பிரிட்டன் தற்போது பழிவாங்கும் வரிகளை விதிக்க பரிசீலிக்கவில்லை. நாங்கள் அந்த நிலைக்கு இன்னும் வரவில்லை. பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.
வர்த்தகப் போர் யாருக்கும் உதவாது என்கிற இந்த வார்த்தையை இந்தியா, சீனா, ரஷ்யாவிற்கு அமெரிக்கா
அதிக வரி விதித்த போது சொல்லியிருக்க வேண்டும். ங்கொய்யால உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா?
நவீன அமெரிக்க துக்ளக் திருந்துவாரா? மாட்டார்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் முடிவின் பலன் அமைதி மார்க்க வசம் சென்று விடும். அவர்களிடம் மட்டும் தான் உலகை மாற்ற முரட்டு ராணுவம், தனி சட்ட புஸ்தகம், அதர்மம் விரும்பும் பாதுகாப்பு படை உண்டு . ஊடுருவ தீவிரவாதிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். அணு ஆயுதம் கொண்டு கற்பனையில் மிதக்க வேண்டாம். இரு பக்கம் தாங்க முடியாது. அதிக சுதந்திரம் கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்கி விட்டார்கள். ஒன்றுபட வேண்டும். அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும்.
நாடுகள் வரிவிதிக்கும் முறை தவறானது இல்லை .ஆனால் இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகநாடுகளின் எல்லாம் நாகரீகவளர்ச்சியாக கருதி வரிகளை சுமுகமாக விதிக்கும் தன்மையை நாகரிகமாக நடத்திவருகின்றன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி அவர்தான் உலகத்துக்கே முதலாளி போலவும் ,எல்லோரும் அவருக்கு அடிபணிந்து கப்பம் கட்டவேண்டும் என்ற மனநிலையில் நாடுகளிடையே அநாகரீகமற்ற முறையை கடைபிடித்து நடத்துவதுதான் தவறாக கருதப்படுகின்றது .சுயமரியாதை உள்ள நாடுகள் எல்லாம் இதற்க்கு அடிபணியாது என்பதை அவர் அரியவேண்டும்.அவரிசூழ்ந்துள்ள கூட்டங்களும் சுயபுத்தியற்று அவரின் செயல்களை கைகொட்டி ஆராவாரம் செய்வது அவருக்கு உதவி செய்யாது .
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் ".மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்