ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
சென்னை: ஆர்.எஸ் எஸ்., முகாம் நடத்தியதற்காக, அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து, தனியார் பள்ளி தாக்கல் செய்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், கடந்த ஆண்டு டிச., 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் முகாம் நடத்தப்பட்டது. இதில், யோகா, சூரிய நமஸ்காரம், தேசபக்தி மற்றும் ஒழுக்க கல்வி, மனவலிமை, உடல்வலிமையை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதற்கு காவல்துறையும், பள்ளிக்கல்வித் துறையும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., முகாம் நடத்தியதற்காக, பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என விளக்கம் கேட்டு, தமிழக தனியார் பள்ளிகள் கல்வி இயக்குனரகம் சார்பில், கடலுார் சரஸ்வதி வித்யாலயா பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி, பள்ளி தாளாளர் சுரேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், பள்ளி விடுமுறை காலத்தில் தான், 'ஆர்.எஸ்.எஸ்., முகாம் நடத்தப்பட்டது. பள்ளியின் செயல்பாடுகளுக்கு எந்தவித இடையூறுமின்றி முகாம் நடத்தப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது.இதை கேட்ட நீதிபதி, மனுவுக்கு பிப்.,17ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை செயலர், தமிழக தனியார் பள்ளிகள் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
வாசகர் கருத்து (50)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
04 பிப்,2026 - 21:47 Report Abuse
மாணவ மாணவிகள் பயிலும் பள்ளிகளில் இவர்கள் மாநாடு நடத்தலாம் கட்சி பொதுக்கூட்டம் போடலாம் ஆனால் பள்ளி ஒய்வு நாட்களில் மாணவ மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் அங்கே ஆக்கப்
பூர்வமான தேச நலன்கருதி செய்யப்படும் முகாமுக்கு தடை என்னைய்யா இது ஹிட்லர் ஆட்சியை போன்றே உள்ளது 0
0
Reply
விஸ்வநாத் கும்பகோணம் - ,
04 பிப்,2026 - 21:20 Report Abuse
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த (தமிழக அரசின்)இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதற்கு தமிழக அரசின் ஆட்சியை கலைக்க நோட்டீஸ் அனுப்பலாமா? 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
04 பிப்,2026 - 21:10 Report Abuse
திருட்டு திமுக வை விட இன்னும் ஒரு பயங்கர வாத இயக்கம் இருக்க முடியுமா? அல்லது இவர்கள் இருக்கத்தான் விடுவார்களா? நக்ஸலைட் இயக்கங்களுக்கு நிகராக தடை செய்யப்பட்டு வேட்டையாடி ஒழிக்கப்பட வேண்டிய இயக்கம் தி.மு.க....
. 0
0
Reply
Ravi Kulasekaran - ,இந்தியா
04 பிப்,2026 - 19:06 Report Abuse
தேச பக்தி வரகூடாது என்ற கெட்ட எண்ணம் தமிழ் நாட்டு அரசுக்கு உண்டு 0
0
Reply
Ram pollachi - ,
04 பிப்,2026 - 17:12 Report Abuse
பள்ளி குழந்தைகள் பயணிக்கும் மஞ்சள் பேருந்துகளை அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடு மற்றும் விழாக்களுக்கு அனுப்புவது ஏன் என்று ஒரு ஓலையை அனுப்புங்கள்.... 0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
04 பிப்,2026 - 16:44 Report Abuse
கல்வி கற்கும் உரிமையையும், ஒரு நிறுவனத்தின் நிர்வாக உரிமையையும் அரசியல் காரணங்களுக்காகத் தடுப்பது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் நடத்தும் பயிற்சி முகாம்களால் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாதபோது, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று மிரட்டுவது ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகமே தவிர வேறில்லை. நீதிமன்றத்தின் கேள்விக்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்." 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
04 பிப்,2026 - 16:18 Report Abuse
மக்களாக அவர்களை புறக்கணிக்கும் வரை அவர்களது அரசை கலைக்கக் கூடாது. இவர்களுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று மக்கள் உணர வேண்டும். அது வரை எதுவும் செய்யக் கூடாது. இது தான் ஆட விட்டு வேடிக்கை பார்ப்பது. 0
0
Reply
karthik - chennai,இந்தியா
04 பிப்,2026 - 16:14 Report Abuse
அரசு பள்ளி விழாவில் பொருட்களை குடுத்துவிட்டு அம்மா அப்பாவிடம் சொல்லி திமுகவிற்கு ஓட்டு போட சொல்லணும் என்று பள்ளிக்குழந்தைகளிடம் கூறுகிறார் திமுக MLA அதை கேக்க ஒருத்தனும் இல்லை... 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
04 பிப்,2026 - 15:07 Report Abuse
பள்ளி வளாகத்தில் ஆளும்கட்சி யின் நிர்வாகி ஒருவர்,பெற்றோர் ஆசிரியர் அஸோஸியேஷன் தலைவர் என்ற போர்வையில் பலவகையான தொழில் முனையும் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக வந்தவிஷாயமாக ஏதாவது விள்ளக்கம்கோரி நோட்டீஸ் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. 0
0
Reply
Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா
04 பிப்,2026 - 15:02 Report Abuse
ஆர் எஸ் எஸ் என்ன தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் உள்ளதா? அல்லது அரசியல் கட்சியா? இரண்டுமே இல்லையே. அவர்கள் கட்சி கொள்கைகளுக்காக முகாம் நடத்தினார்களா? தேசபற்றை ஊக்குவிக்கத்தானே நடத்தினார்கள். கட்சி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டபோது பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்டது சரியா? 0
0
Reply
மேலும் 40 கருத்துக்கள்...
மேலும்
-
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
-
புதிய ஏ.ஐ., வசதி அறிமுகத்தால் அதல பாதாளத்தில் ஐ.டி., பங்குகள்
-
வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் தங்கத்துக்கு இனி எடை தான் வரம்பு!
-
கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் சரிவு
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,600 ஒரு சப்போர்ட்டாக உருவாகியுள்ளது
-
பி.ஹெச்.இ.எல்., பங்கு விலை உயர்வு
Advertisement
Advertisement