'மாஜி' அமைச்சர் பிரசுரம் வழங்கல்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி, தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “தி.மு.க., ஆட்சியில் சொன்னதை செய்யாத பணிகள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும். பொதுமக்கள், தி.மு.க. ஆட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.,விற்கு இனி எதிர்காலம் இல்லை.


குமாரபாளையம், காவேரி நகரில் சமுதாய கூடம் கட்ட ஆண்டுக்கு, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கொடுத்தும், நன்கு முறை திருப்பி அனுப்பி விட்டனர். ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று கூறியதால், தற்போது அந்த பணி துவங்கியுள்ளது,” என்றார். நகர செயலர் பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement