அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு
வாஷிங்டன்: கடந்த 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, பிரசாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி டிரம்பை படுகொலை செய்ய முயன்றவருக்கு, அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உள்ளது.
கடந்த 2024ம் செப்டம்பர் 15ம் தேதி புளோரிடா மாகாணத்தில் தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கோல்ப் கிளப் அருகே, ஏகே-47 துப்பாக்கியுடன் ஓடுவதை கண்ட ரகசிய போலீஸ் அதிகாரிகள் அவரை மடக்கி கைது செய்தனர். இவர் 59 வயதான ரியான் ரூத் என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். தற்போது அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை அமெரிக்க நீதிமன்ற நீதிபதி ஐலீன் கேனன் வழங்கினார். இந்த தீர்ப்பை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார்.
ஏன் அங்கெல்லாம் தூக்கு தண்டனை இல்லையா?மேலும்
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
-
மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
-
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்
-
விவேக் ராமசுவாமி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை
-
எனக்கு சவக்குழி தோண்ட முயற்சி: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
தேர்தல் அறிக்கை இணையதளம் : வெளியிட்டது தவெக