பட்ஜெட்டில் ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு 8.5 மடங்கு அதிகரித்துவிட்டது; ஸ்டாலினுக்கு மத்திய அரசு பதில்
நமது நிருபர்
''2014ம் ஆண்டிலிருந்து தமிழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27ம் ஆண்டில் ரூ.7,611 கோடியாக உயர்ந்துள்ளது'' என ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழுமையான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு விளக்கம் அளித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. 2014ம் ஆண்டிலிருந்து தமிழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27ம் ஆண்டில் ரூ.7,611 கோடியாக உயர்ந்து உள்ளது.
* 2014ம் ஆண்டுக்கு முன்பிருந்த காலத்தை விட, தற்போது தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் 2 புதிய புல்லட் ரயில் தொடங்கப்பட உள்ளது. சென்னை- பெங்களூரு, சென்னை- ஹைதராபாத் ஆகிய இரண்டு வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
* புல்லட் ரயில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, சென்னையில் இருந்து பெங்களூரு ஒரு மணி நேரம் 30 நிமிடத்தில் செல்ல முடியும். சென்னை- ஹைதராபாத்திற்கு 2 மணி நேரம் 55 நிமிடத்தில் செல்ல முடியும்.
* தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக தேவைப்படும் நிலம் 4,326 ஹெக்டேர். ஆனால் கையகப்படுத்தப்பட்டது வெறும் 1,052 ஹெக்டேர் (24%) மட்டுமே. அதே நேரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்காகத் தமிழக அரசிடம் ஏற்கனவே ரூ.1,465 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது.
* தமிழகத்தில் 97% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளன; அதில் 18 நிலையங்களில் பணிகள் முடிந்துவிட்டன. தமிழகத்தில் தற்போது 9 ஜோடி வந்தே பாரத் மற்றும் 9 ஜோடி அமிர்த் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
* தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு எந்தக் குறையும் வைக்கவில்லை. தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்காததே ரயில்வே திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணமாகும்.
* மதுரை- தூத்துக்குடி ரயில்வே திட்டத்திற்கு 91 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணி முடியவில்லை.
* திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை ரயில் திட்டத்திற்கு 86 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. ராமேஸ்வரம்- தனுஷ்கோடி திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை.
* ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் இருப்பதால் பல முக்கிய திட்டங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (31)
Nachi - ERODE,இந்தியா
09 பிப்,2026 - 21:58 Report Abuse
முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் தெரியவில்லை. எப்போதும் மத்திய அரசை குறை சொல்லி திட்டி கொண்டே இருந்தால் , எதுவும் நடக்காது. இவர்கள் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள். அதனால் இப்படி. ஆனாலும் பிஜேபி அரசு நிறையவே நிதி தருகிறது , ஆனால் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு இல்லை . 0
0
Reply
Stalin Soundarapandian - Al Jubaila,இந்தியா
09 பிப்,2026 - 21:24 Report Abuse
இந்தியாவின் மொத்த ரயில்வே பட்ஜெட் சராசரியாக 2009 - 14 ரூ. 10, 623 கோடியிலிருந்து, 2025 - 26 ஆம் ஆண்டில் ரூ. 2.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 25 மடங்கு அதிகரிப்பு.
ஆனால், இந்த 25 மடங்கு தேசிய அதிகரிப்புட ஒப்பிடும்போது, ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு மடங்கு உயர்ந்தது? என்பதுதான் கேள்வி.
குஜராத் ரூ. 589 கோடியிலிருந்து ரூ. 17,155 கோடி 29 மடங்கு
தில்லி ரூ. 96 கோடியிலிருந்து ரூ. 2,539 கோடி 27 மடங்கு
சத்தீஸ்கர் ரூ. 311 கோடியிலிருந்து ரூ. 7,470 கோடி 24 மடங்கு
மத்திய பிரதேசம் ரூ. 652 கோடியிலிருந்து ரூ. 14,738 கோடி 23 மடங்கு
மகாராஷ்டிரம் ரூ. 1,171 கோடியிலிருந்து ரூ. 23,778 கோடி 20 மடங்கு
உத்தர பிரதேசம் ரூ. 1,109 கோடியிலிருந்து ரூ. 19,858 கோடி 18 மடங்கு
ராஜஸ்தான் ரூ. 682 கோடியிலிருந்து ரூ. 9,960 கோடி 15 மடங்கு
ஒடிசா ரூ. 838 கோடியிலிருந்து ரூ. 10,599 கோடி 12.5 மடங்கு
ஆந்திர பிரதேசம் ரூ. 886 கோடியிலிருந்து ரூ. 9,417 கோடி 11 மடங்கு
ஹரியாணா ரூ. 315 கோடியிலிருந்து ரூ. 3,416 கோடி 11 மடங்கு
பிகார் ரூ. 1,132 கோடியிலிருந்து ரூ. 10,066 கோடி 9 மடங்கு.
ஆனால், தமிழ்நாட்டுக்கு ரூ. 879 கோடியிலிருந்து ரூ. 6,626 கோடி வெறும் 7.5 மடங்கு மட்டுமே.
தேசிய ரயில்வே பட்ஜெட் 25 மடங்கு உயர்ந்தபோதும், தமிழ்நாடு மட்டும் 7.5 மடங்குதான் உயர்ந்தது. 0
0
panneer selvam - Dubai,இந்தியா
10 பிப்,2026 - 22:01Report Abuse
Stalin bhai there are two major reasons comparing other states . One there is major traffic of goods from Tamilnadu to other states by rail second one is there is a slackness in land acquisition of land by state government so Central government can not spend the money for new projects . Classic example Velacherry - Mount rail link was delayed by 18 years due to interference of politicians on that area on a stretch 500 meter land 0
0
Reply
SUBBU,MADURAI - ,
09 பிப்,2026 - 20:03 Report Abuse
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி இரயில் சேவை வேண்டி நாங்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டதற்கு மத்திய அமைச்சரின் பதில் நாங்கள் உங்கள் வேண்டுகோளை ஏற்று ரயில் சேவை செய்ய தயாராக இருக்கிறோம் ஆனால் அதற்குரிய நிலத்தை தமிழக மாநில அரசு சர்வே பண்ணி கொடுக்க வேண்டுமே So Sorry என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளது! எனவே இந்த திட்டம் யாரால் முடங்கியுள்ளது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள
வேண்டும். 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
09 பிப்,2026 - 19:44 Report Abuse
தமிழகத்திற்கு பத்து பைசா கொடுக்க தேவை இல்லை. ஸ்டாலின் கதறட்டும். 0
0
Reply
RAMASAMY - ,இந்தியா
09 பிப்,2026 - 16:56 Report Abuse
சதர்ன் ரயில்வே வருவாய் சொல்லும்படி சிறப்பாக இல்லை கடைசிக்கு முந்திய நிலை தான் வட பகுதி ரயில்வே ஜோன்கள் அதக வருவாய் ஈட்டியுள்ளது. ஸ்டாலின் மீனவர் நீட் ரயில்வே அதிக நிதி என்று கடிதம் எழுதி ஏமாத்தல் தான் திராவிட மாடல். ஏமாறும் தமிழர்கள் இருக்கும் வரை சூப்பர் ட டூப்படர் தந்தை மகன். 0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
09 பிப்,2026 - 14:45 Report Abuse
தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது... 0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
09 பிப்,2026 - 14:27 Report Abuse
நாலாயிரம் ஹெக்டர் வேண்டிய நிலயில் ஆயிரம் ஹெக்டர் மட்டுமே கையகப்படுத்தியுள்ளார்கள் .பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது. 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
09 பிப்,2026 - 14:18 Report Abuse
SOUTHERN ரயில்வே தான் நாட்டிற்க்கே REVENUE அனால் எங்களுக்கு ஒரு திட்டம் இல்லையே, 100 KM ஓடும் ரயில் 110 KM ஓடவிட்டுட்டு இது ஒரு திட்டம் என்று பேசுவது , வடக்கன் ஹமாரா DESH ஹமாரே TRAIN இதற்கு எதற்கு டிக்கெட் எடுக்கணும் என்று ஓசியில் சொல்லுகிறான் அனால் புது திட்டம் முழுவதும் அவனுக்கு தான் என்று இந்த நிலை மாறுமோ 0
0
ponssasi - chennai,இந்தியா
09 பிப்,2026 - 16:20Report Abuse
அமைச்சர் கருத்துக்கு பதில் சொல்லுங்க. 86% நிலம் மத்தியஅரசிடம் ஒப்படைக்கவேண்டும் அதன் பின் நீங்க பேசுங்க 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
09 பிப்,2026 - 14:14 Report Abuse
24 சதவீதம் மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தி இருக்கு திராவிட மாடல் ஆட்சி. ரயில்வே துறை அமைச்சர் இதை சொல்லி உள்ளார். ஸ்டாலின் இதை மறுப்பாரா. ரயில்வே அமைச்சர் பொய் சொல்கிறார் என்று சொல்லட்டும் 0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
09 பிப்,2026 - 14:09 Report Abuse
தென்னக ரயில்வே தான் அளவுக்கு அதிகமான வருவாயை கொடுக்கிறது. இங்கு வாய்ப்புகள் அதிகம். தற்பொழுது உள்ள தென் மாவட்ட வழி தடங்களை முழுமையாக பயன்படுத்த தவறியதன் விளைவே தென் மாவட்ட மக்கள் பண்டிகை காலங்களில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் தமிழக ரயில் பயணிகள் அனைவரும் டிக்கெட் எடுத்து தான் பயணிக்கிறர்கள். 0
0
Reply
மேலும் 19 கருத்துக்கள்...
மேலும்
-
ஏஐ மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
இதெல்லாம் ரொம்ப டூ மச்; முன்னாள் அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு வரி விதித்தார் டிரம்ப்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு
-
திமுக அரசுக்கு ஆதரவான மனநிலை: முதல்வர் ஸ்டாலின்
-
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்
Advertisement
Advertisement