தே.ஜ.கூட்டணி ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை முன், தி.மு.க., அரசை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பேசுகையில், ''தமிழகத்தில் கடந்த, ஐந்தாண்டு காலம் இருண்ட காலமாக இருந்து வந்தது. குழந்தை முதல் பெண்கள் வரை பாதுகாப்பு இல்லை. டபுள் இன்ஜின் இருந்தால் மட்டுமே, ஒரு மாநிலம் வளர்ச்சியை அடையும். தமிழகத்திற்கு, 11 மருத்துவ கல்லுாரிகளை, டபுள் இன்ஜின் இருந்ததால் தான், இ.பி.எஸ்., கொண்டுவந்தார். வரும் சட்டசபை தேர்தலில் டபுள் இன்ஜின் இருந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடைய முடியும்,'' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி, பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் மகேஸ்வரன், மாநில தொழில் பிரிவு செயலாளர் நாகராஜன், த.மா.கா., மாவட்ட தலைவர் செல்வகுமார், பா.ம.க., மாவட்ட தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
கடன் வசதி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தும் ராஜஸ்தான், உ.பி., பீஹார்
-
விவசாயிகள் நலனை விற்ற காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
-
அமைச்சர் துரைமுருகனுக்கு அப்பல்லோவில் தொடர் சிகிச்சை!
-
ரயிலில் இருந்து விழுந்த மும்பை நபர் பலி; காப்பாற்ற முயன்ற மனைவியும் இறந்த சோகம்
-
திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ்
-
சட்டசபை தேர்தல் பணிகள் ஆய்வு; சென்னையில் தேர்தல் கமிஷனின் 7 பேர் குழு ஆலோசனை