'பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்போம்': தே.மு.தி.க., நிர்வாகி மிரட்டல் பேச்சு

3

சென்னை: “பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்போம்,” என, தே.மு.தி.க., பூத் நிர்வாகிகள் கூட்டத்தில், பொதுச்செயலர் பிரேமலதா முன்னிலையில், தேர்தல் பொறுப்பாளர் பேசினார்.


சென்னையை அடுத்த அம்பத்துாரில், தே.மு.தி.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலர் பிரேம லதா, பொருளாளர் சுதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


கூட்டத்தில், விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாரி பேசியதாவது: எனக்கு சிறை புதிதல்ல; மூன்று முறை சிறைக்கு சென்றுள்ளேன். அதுவும், பத்திரிகையாளர்களை அடி த்துதான் சிறைக்கு சென்றேன். எனக்கு மிகவும் கோபம் வருகிறது. மறுபடியும் சொல்கிறேன்; இது சரியில்லை. பத்திரிகையாளர்களை, நாளை வீடு புகுந்து அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். கண்டிப்பாக இது நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம் துவங்கியும், மனு வாங்க யாரும் வராததால், தே.மு.தி.க., தலைமை அலுவலகம் வெறிச்சோடியதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, அவர் பேசினார். கட்சி நிர்வாகியின் மிரட்டல் பேச்சை, பொதுச்செயலர் பிரேமலதா கைதட்டி ரசித்தார்.

Advertisement