பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்

52


புதுடில்லி: அவையில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும் என லோக்சசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசுகையில் தெரிவித்தார்.


லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் பேசியதாவது: அவையில் பேசுவதற்கு எனக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள இரண்டு அம்சங்கள் குறித்து பேச வேண்டும். எரிசக்தியையும், பொருளாதாரத்தையும் ஆயுதமாக பயன்படுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. 140 கோடி மக்கள் தான் இந்தியாவின் முக்கியமான பலம். உலகின் எல்லா பகுதிகளிலும் போர் மூளும் அபாயம் நிலவி கொண்டு தான் இருக்கிறது. எரிபொருள், பொருளாதாரத்தை ஆயுதமாக்கும் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement