தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்

2

திருநெல்வேலி: தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அது அவர்கள் கூட்டணிக்காக சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். அதாவது கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, தமிழகத்தில் இதுவரை திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது. நான் உங்களுக்கு பல முறை சொல்லி இருக்கிறேன்.

ஆட்சிக்கு வருவோம் என்று உறுதியான நிலை இருந்த போது, கூட்டணி இருந்தால் என்ன, கூட்டணி இல்லாவிட்டால் என்ன? இருந்தாலும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, முதல்வர் அவ்வாறு சொல்லி இருக்கிறார். நாங்கள் 200 தொகுதியில் ஜெயிப்போம். தேசிய ஜனநயாக கூட்டணி நிச்சயமாக 200 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக முதல்வர் ஸ்டாலின் சொன்னது மாதிரி, அவர்களுடைய கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா அல்லது விஜய் கட்சிக்கு போவார்களா என்பது தான் இப்போது கேள்விக்குறி.



இருந்தாலும் டில்லியில் ராகுலை கனிமொழி சந்தித்து இருக்கிறார். இந்த சூழலில் இன்று முதல்வர் இப்படி சொல்லி இருப்பதை பார்த்தால், அவர்களுக்கு அச்சமும், பயமும் இன்னைக்கு அவர்களிடம் இருக்கிறது. அதனால் இன்றைக்கு கூட்டணி பலம் இல்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement