சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
புதுடில்லி: '' காங்கிரஸ் எம்பிக்கள் 25க்கும் மேற்பட்டோர், அவரது அறைக்குள் நுழைந்து சபாநாயகரை வசைபாடினர்,'' என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
லோக்சபாவில் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி பேச காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இதனிடையே, லோக்சபாவில் பிரதமர் மோடி இருக்கையை காங்கிரஸ் எம்பிக்கள் சூழ்ந்த வீடியோ காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களிடம் கூறியதாவது: சபாநாயகர் அறைக்குள் 20 முதல் 25 எம்பிக்கள் நுழைந்ததுடன் அவரை வசை பாடினர். நானும் அங்கு இருந்தேன். சபாநாயகர் மென்மையான மனிதர். வேறு யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். பிரியங்கா, கேசி வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் மூத்த எம்பிக்கள் அவர்களை ஊக்குவித்தனர்.
சபாநாயகர் அறைக்குள் நுழைந்து அவரை விமர்சித்ததுடன், மோசமான விஷயங்களை கூறினர். சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை அவர்கள் பின்பற்ற மறுத்துவிட்டனர். 'நான் பேசுவதற்கு யாரின் அனுமதியில்லை' என ராகுல் கூறினார். எந்த விதிமுறைகளையும் மீறி, தனது விருப்பப்படி பேசுவேன் என்கிறார். அவையில் சபாநாயகர் அனுமதி அளிக்காவிட்டால் யாரும் பேச முடியாது. பிரதமர் கூட சபாநாயகரின் அனுமதி பெற்றுத் தான் பேச வேண்டும். அனுமதி வாங்கித்தான் அனைவரும் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ராகுலுக்கு தான் ஏதோ பட்டத்து இளவரசர் என்று நினைப்பு.... வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார்..... இது ஒன்றும் காங்கிராஸ் கூடாரம் அல்ல... ராகுல் உளறுவதை கேட்க.... உண்மையை மட்டுமெ பேச வேண்டும்.....ஆனால் உண்மைக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்.
திடுக்கிட்டேன். அந்த திடுக் யாருக்கும் வராமல் தடுத்திருக்க நரவனே புத்தக விவாதத்துக்கு சபாநாயகர் அனுமதி தந்திருக்கலாம். பிறகு அது சரியல்ல என்று காட்ட ஆளும் கட்சிக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.
திரு ராஜசேகரனின் கருத்து சரியானதுதான். ஒரு திருத்தம். நரவனே புத்தக விவாதத்துக்கு சபாநாயகர் அனுமதி தந்திருக்கலாம். பிறகு அது சரியல்ல என்று காட்ட ஆளும் கட்சிக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.
ராகுலுக்கு தான் ஒரு முடி சூட அரசர் என்று நினைப்பு. அவருடைய நடவடிக்கையால் காங்கிரஸ் அழிந்து வருகிறது . தேசீய எதிர் கட்சி நமது நாட்டிற்கு மித அவசியம் . காங்கிரெஸ்ஸை குடும்ப கட்ச்ஹியாக மாற்றி மாநிலத்தில் உள்ள குடும்ப கட்சிகளுடன் கூட்டணி வைத்து தங்கள் சுய நலடயத்திற்க்காக ஓர் தேசிய கட்சியை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளார் .
இந்திய அற நெறி பண்புகள் எதுவும் இல்லாத இத்தாலிய அதிகார திமிர் கொண்ட இவர் ஆட்சியில் அமர்ந்தால் நாடு நரகம் ஆகும் மக்கள் தொடர்ந்து பா ஜ க க்கு வாக்களிக்க இதுவே காரணம்
கேவலமான இந்திய சட்டம் உடனே மாற்றப்படவேண்டும் இப்படி. 1 எம்பி எம் எல் ஏ க்கள் அறிவு கெட்டதனமாக உளறினால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டு அங்கிருந்து 10 ஆண்டுகள் அவர்கள் அந்த பதவி வகுக்க இடமில்லை என்று சட்டம் ஆணித்தரமாக அறிவிக்கப்படவேண்டும். 2 கற்பழிப்பு / கொலை 50% நிரூபிக்கப்பட்டால் கூட அவர்களுக்கு உடனே மரணதண்டனை சட்டம் விதிக்கப்படவேண்டும் 3 எம் எல் ஏ எம் பி ரூ 2 கோடிக்கு மேல் அவர் மீது அல்லது அவர் சுற்றத்தார்கள் மீது அவர் பதவியில் இருக்கும்போது சேர்க்கப்பட்டதாக செய்தி அல்லது ஒரு ஊகம் கூட வந்தால் அந்த சொத்து உடனே அரசுக்கு சொத்துரிமை 100% மாற்றப்படவேண்டும்
I fully agree the MPs and MLAs are expected to the rule and set an example for the common public. Since the MPs and MLAs are be like gooligans in the street the relevant rule must be modified as suggested .
ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு ஆணவம். ஆட்சியிலிருந்தள் என்ன செய்வார்களோ. சபாநாயகர் இப்படி மென்மையாக இருக்க வேண்டாம்.
Birth Right? Right
மக்களவை சபாநாயகர் வெளிப்படையாக பாரபட்சம் காட்டுகிறார். நம்பிக்கையில்லா தீர்மானம் ஞாயமானதே.
அப்பாவு வெளிப்படையாகவே திமுக சார்பாக பேசுகிறாரே. திரு ஓம் பிர்லா அப்படி செய்ததுண்டா?
ராகுலுக்கு இன்னும் தான் இளவரசர் என்றே நினைப்பு. என்ன மயக்கத்தில் இருக்கிற ஆசாமியோமேலும்
-
ஏஐ மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
இதெல்லாம் ரொம்ப டூ மச்; முன்னாள் அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு வரி விதித்தார் டிரம்ப்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு
-
திமுக அரசுக்கு ஆதரவான மனநிலை: முதல்வர் ஸ்டாலின்
-
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்