ரபேல் ஒரு ஹீரோ: நிறைய போர் விமானங்களை இணைக்க திட்டம்; விமானப்படை துணைத் தலைவர் தகவல்

8

புதுடில்லி: ரபேல் விமானம் ஒரு ஹீரோ போல் செயல்பட்டது. இன்னும் நிறைய போர் விமானங்களை படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என விமான படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​ரபேல் போர் விமானங்கள் ஒரு ஹீரோ போல செயல்பட்டது. ரபேல் விமானம் செயல்பாடு அனைவராலும் பேசப்பட்டது. நவீன போர் விமானங்களைக் கொண்டு கடற்படையை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


ரபேல் அல்லது வேறு எந்த விமானமாக இருந்தாலும், இன்னும் நிறைய அடுத்த தலைமுறை போர் விமானங்களை சேர்க்க இந்திய விமானப்படை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது அது பரிசீலனையில் உள்ளது.


இது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. 114 கூடுதல் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்தை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவுள்ளது. இவ்வாறு ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறினார்.

Advertisement