இத்தாலி ஹாலிவுட் பட பாணியில் நடந்த கொள்ளை முயற்சி
ரோம்: இத்தாலியில், முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில், ஹாலிவுட் பட பாணியில் பணம் கொண்டு சென்ற வேனில் கொள்ளையை அரங்கேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் புக்லியா மாகாணத்தில், அதிவேக நெடுஞ்சாலையில் பணம் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது. இதை, முன்கூட்டியே அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று, முகமூடி அணிந்தபடி, துப்பாக்கிகளுடன் போலீஸ் வாகனத்தில் வந்திறங்கியது.
சாலையில் இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், பணம் ஏற்றிச் சென்ற வேனை தடுத்து நிறுத்த, ஒரு லாரி மற்றும் வேனை தீ வைத்து எரித்தனர். பின்னர் வேனை சுற்றி வளைத்து, வெடிகுண்டுகளை வைத்து கதவுகளை தகர்த்தனர்.
தகவல் அறிந்த வந்த போலீஸ், அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி அந்த கும்பல் தப்பித்தது. விடாது துரத்திய போலீசார், இரண்டு பேரை மட்டும் பிடித்தனர்; ஆறு பேர் தப்பியோடினர்.
மேலும்
-
வங்கதேச பொதுத்தேர்தல் முதல் உலககோப்பை- இந்தியா-நமீபியா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப் 12)!
-
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு; கடந்த கால தாக்குதலை நினைவூட்டிய அதிபர் டிரம்ப்!
-
பூமிக்கருவில் ஒளிந்திருக்கும் உயிர் ரகசியம்
-
சூரிய பலகைகளுக்கு பாசி தரும் பாடம்
-
எழுத்தறிவுக்கு முன்பே பிறந்ததா எண் அறிவு?
-
அறிவியல் துளிகள்!