உணவு கொண்டு வந்த பெண்ணிடம் ஜாதியை கேட்டதாக குற்றச்சாட்டு; பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கு பாப்பையா ஆதரவு
நமது நிருபர்
அமெரிக்காவில் நடந்த விழாவில், உணவு கொண்டு வந்த பெண்ணிடம் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஜாதி பற்றி விசாரித்ததாக எழுந்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராஜாவுக்கு ஆதரவாக பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வீடியோ வெளியிட்டுள்ளார்.
செட்டிநாடா என கேட்டேன். செட்டியாரா என கேட்கவில்லை என்றார். இந்நிலையில் பட்டிமன்ற நடுவரும், தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா ராஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:
தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய், அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
நன்றாக தெரியும்
ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது. ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் சந்தத்தை அவருடைய சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்பதை நான் சத்தியம் செய்து சொல்லுவேன்.
ஜாதிய உணர்வு
ஆனால் அப்படிப்பட்ட மனிதரை ஏதோ ஒரு தவறான கணிப்பினால் இப்படிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே ஜாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கிஞ்சித்தும் இல்லை. அவரைப் பற்றி இப்படிச் சொன்னது உள்ளபடியே எனக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தம்.
பகைமை
எங்களுடைய பண்ணையில யாருமே அப்படி இல்லை, அப்படி வளர்ந்தவர்கள் நாங்கள் யாருமே அப்படி இல்லை. ஏன் இந்த தவறான கருத்து வந்தது, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேறு இருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, நட்பை விட பகைமை மேலோங்கி இருப்பதைக் காண்கிறேன். இது தமிழர்களுக்கு நல்லது அல்ல, தமிழ் வளர்ச்சிக்கு இது நல்லதும் அல்ல. அதனால் மிகப் பணிவாக உங்களிடம் கேட்கிறேன்.
வருத்தம்
எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரே கேட்டிருக்கலாம், அவரை திருத்தி இருக்கலாம். அந்தத் தாய் திருத்துவதற்கு பதிலாக இந்தப் பதிவை செய்து பகைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடத்தில் என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன்" இவ்வாறு சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.
@block_P@
இது குறித்து ராஜா விளக்கம் அளித்து
வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: அனைவருக்கும் என் அன்பான வணக்கம். உலகெங்கும் இருக்கிற தமிழ் சொந்தங்களுக்கு, ஒரு செய்தியை நான் தர விரும்புகிறேன். அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்து இருந்தோம். அப்பொழுது பல தமிழ் சொந்தங்கள் வீடுகளில் இருந்து சமையல் செய்து எங்களுக்கு உணவு கொடுத்தார்கள்.
உணவு மிகவும் ருசியாக இருந்த காரணத்தால், அது செட்டிநாட்டு முறைப்படி சமைக்கப்பட்டதா என்பதை அறியவே "செட்டிநாடா?" என்று கேட்டேன்.
மற்றபடி "செட்டியாரா?" என்று ஜாதி ரீதியாகத் தான் கேட்கவில்லை.
ஒருவர் என்ன சமூகம் என்பதை யோசிக்கும் அளவுக்கு சின்ன புத்தி எனக்கு இல்லை. தமிழகத்தில் எத்தனையோ பகுதிகளுக்கு சென்று பலரையும் சந்தித்துள்ளோம். யாரையாவது ஜாதி மற்றும் சமய உணர்வுகளோடு பார்த்திருந்திருப்பேனா? தமிழன் என்ற ஒன்றைதான் நான் பெருமையாக கருதுகிறேன். உண்மையில் மிகவும் மன வலியுடன் இதை பேசுகிறேன். எந்த காலத்திலும் நான் அப்படி இருந்ததில்லை. இருக்கப் போவதும் கிடையாது. தமிழ் சொந்தங்கள் தயவுசெய்து இந்த கருத்துக்களை புறந்தள்ளுங்கள். இவ்வாறு ராஜா விளக்கம் அளித்துள்ளார்.block_P
அந்நிய அங்கி அப்படிதான் இருப்பானுங்க
மாற்று மதத்தினரை இழிவு படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு பொய் சொல்லிக் கொண்டு அலையும் கும்பல் யார் என்று எல்லோருக்கும் தெரியும்!
ஜாதியம் பேசுவது கீழ்த்தரமான செயல். தமிழகத்தில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அருணனைத் தவிர வேறு யாரும் ஜாதியம் பேசுவதில்லை. திருட்டு திராவிடியா பசங்களைத் தவிர வேறு கட்சியினர் ஜாதி அரசியல் செய்வதில்லை.
ராஜாவும், சாலமன் பாப்பையா அவர்களும், அந்த பெண்மணியும் ஆளுக்கு இருநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு இந்த மாதிரி ஒரு செட்டப் செய்தியை கொடுத்துள்ளார்களோ என்ற ஐயம் தமிழக மக்களில் பெருவாரியானோருக்கு இருக்கிறது.
சமீபத்தில் மரியாதைக்குரிய ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் திருப்புறம்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் என் பண்ணையில் சாதி பற்றிய சிந்தனை இல்லை என கூற அவருக்கு உரிமையில்லை. திரு ராசா கருத்து வேண்டுமானால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கலாம் அதற்கு வக்காலத்து வாங்க திரு பாப்பையாவுக்கு தகுதியில்லை
பட்டிமன்ற காமடி பேச்சாளர்கள் சாலமன் பாப்பையாவும் ராஜாவும் மத வெறி பிடித்த கிருஸ்தவர்கள், இது சாமான்ய மக்கள் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் தமிழர்கள் என மடை மாற்றி பேசுகின்றனர்.
திருப்பறங்குன்றம் கோவில் விஷயத்தில் தமிழக இந்துக்களுக்கு எதிராக பேசியவர்கள் இவர்கள் இது நீதிமன்றம் தீப்புக்கு எதிரானது. தமிழ் பட்டிமன்ற பேச்சாளர்கள் ஏன் ஆங்கிலம் பேசும் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும்? இதில் வேறு ஏதோ காரணம் இருக்கும். இவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என தெரிந்ததும் பல இந்துகள் இவர்களின் பட்டிமன்றத்தை பார்பதை தவிர்த்து விடுகின்றனர். இவர்கள் திமுக ஆதரவாளர்கள் நடுநிலையாளர்கள் போல ஏமாற்று கின்றனர்.
ராஜா பற்றி சொன்னவுடன், பாப்பையா சிலுத்துக்கொண்டு வருவதைப் பார்த்தாலே தெரியுது. சிலுவைக்கு சிலுவை எப்படி ஆதரவு தருகிறது என்று. திருப்பரங்குன்றம் பற்றி இந்த ஆளு கருத்து சொன்னவுடனே தெரிகிறது அந்த ஆளு எப்படி பட்ட ஆளு என்று. காசுக்கு சலுகைகளுக்கு மார்க்கம் மாறின பச்சோந்திகள் நம் தமிழ் கடவுள் பற்றி, தமிழ் இனம் பற்றி பேச ஆங்கிலேய வம்சத்தில் வந்த இவர்களுக்கு யோக்கியதை இல்லை.
இருவரும் ஒன்றும் உலக மகா உத்தமர்கள் இல்லை. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய பாவாடைகள். அதனால்தான் ஒன்றுக்கொன்று ஆதரவா இருக்கின்றன. இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள் என்ற போர்வையில் திரியும் மத வெறியர்கள்.
தமிழர்களுக்கு நல்லது அல்ல என்பதற்கு அர்த்தம் என்ன. தமிழ் அறிஞர் தமிழர்களை மிரட்டுகிறாரா
திரு பாப்பையா அவர்களே உங்கள் தமிழ் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. உங்கள் பண்ணையில் இருப்பதற்கு திரு ராஜா அவர்கள் விலங்கு இல்லை. அஃறிணைஇல் தான் அதுனு அழைப்பார்கல். உயர்திணையில் அவர் என்று அழைப்பார்கள்.
இதே ராஜாவை அவர் முன்பு இந்தியன் வங்கியில் பார்த்த வேலையை குறிப்பிட்டு சொல்லியிருந்தால் புன்னகை புரிவாரா? கையில் நாலு காசு சேர்ந்ததும் மனிதன் நாக்கு எப்படி எல்லாம் மற்றவர்களை ஏளனப்படுத்துகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.மேலும்
-
ஹிந்தியை கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது; வெங்கையா நாயுடு
-
தமிழகத்திற்கு புது டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,500 லஞ்சம்; விஏஓ கைது
-
மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்; சகவாழ்வின் முக்கியத்துவத்தை விவரித்த மோகன் பாகவத்
-
விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
-
நல்வழிப்பாதையில் நக்சலைட்டுகள்