மீண்டும் பொய்யை பரப்புகிறார் ராகுல்; மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
புதுடில்லி: பார்லியில் மீண்டும் பொய்யை பரப்பும் காங்கிரஸ் எம்பி ராகுல், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு குறித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது; இந்தியாவைக் காட்டிலும் வர்த்தகத்தின் மூலம் வங்கதேசம் அதிக பலன்களை அடைவதாக பார்லியில் ராகுல் மற்றொரு பொய்யைப் பரப்புகிறார். அமெரிக்காவிடம் இருந்து மூலப்பொருட்களைப் பெற்று, அதனை துணியாக உற்பத்தி செய்து, மீண்டும் ஏற்றுமதி செய்தால், அதற்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும். இந்தியாவுக்கும் அதே மாதிரியான வசதி உள்ளது. தற்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த இடைக்கால ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் போது, அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அனைவரும் அறிய முடியும். நமது விவசாயிகளுக்கும் அதிக பலன் கிடைக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கப்படும். தற்போது ரூ.5 லட்சம் கோடியாக இருக்கும் ஏற்றுமதி, ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கும். விவசாயிகள், மீனவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டை அமெரிக்காவுக்கு அடமானம் வைத்து வெட்கமில்லாமை பேசுறாரு..
எப்படி அடமானம் வைத்தார்கள் என பட்டியலிட்டு கூறமுடியுமா? ஏன் எப்பப்பாத்தாலும் கூறுகெட்டத்தனமாகவே பதிவிடுகிறீர்கள்?
அப்போ சீனு நீ திராவிட கொத்தடிமை மற்றும் அமெரிக்கா கொத்தடிமையா.... சூப்பர்
திராவிட கொத்தடிமை பேசுது...
இந்தியா மற்றும் ரஷ்யா உடனான நட்பை பிரித்து இந்தியா மற்றும் ரஷ்யாவின் வளர்ச்சியை தடுப்பது மட்டுமே டிரம்ப் உடைய பிளான் . முதற்கட்டமாக ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் ஆயிலை தடுக்க வைத்து ஒட்டுமொத்த ஆயிலையும் அமெரிக்காவிடம் இருந்து வாங்க வைக்க வேண்டும் என்ற டிரம்ப் திட்டம் வெற்றி பெட்றுள்ளது . இந்திய அரசங்கத்தின் அறியாமையை என்னவென்று சொல்வது . இரும்பு மனிதர் அடல் பிஹாரி வாஜிபியிடம் இருந்த திறமையும் துணிவும் மோடியிடம் இல்லை . எழுதிக்கொடுப்பதை பேசுகிறார் . ஊர் ஊராக சென்று கோயில் குளங்களில் மூழ்கி எழுந்து வருகிறார் . வாஜிபாயின் ஆத்மா மோடிக்கு அந்த துணிவை கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம் . வேறு என்ன செய்வது.
உங்களுக்கு விவரம் தெரியவில்லை தெரிந்துவிட்டு சரியாகப் பேசிக் கொள்ளுங்கள்.
According to the India US trade deal, India secured a lower base tariff of 18% compared to Bangladeshs 19%. Under the universal rule, if India uses 20% US sourced raw materials, the duty s to 0%. Given Indias superior manufacturing scale, this agreement offers India a strategic competitive advantage over other nations.மேலும்
-
ஹிந்தியை கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது; வெங்கையா நாயுடு
-
தமிழகத்திற்கு புது டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,500 லஞ்சம்; விஏஓ கைது
-
மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்; சகவாழ்வின் முக்கியத்துவத்தை விவரித்த மோகன் பாகவத்
-
விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
-
நல்வழிப்பாதையில் நக்சலைட்டுகள்