மகளிருக்கு ரூ.5,000 வழங்கி கூட்டணி கட்சிகளுக்கு 'செக்'
சென்னை: கூட்டணி கட்சிகளின், 'சீட்' பேரத்தை குறைக்க, மகளிர் உரிமைத் தொகை பெறும், 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில், தலா, 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு வரவு வைத்துள்ளது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும், 2021 சட்டசபை தேர்தலின் போது, ஒதுக்கிய அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை, வரும் தேர்தலுக்கும் ஒதுக்க, தி.மு.க., திட்ட மிட்டுள்ளது. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு கேட்டு, தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது.
அதை பின்பற்றி, வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்கின்றன. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது, தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், மகளிர் உரிமைத் தொகை பெறும், 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில், தலா, 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு செலுத்தி உள்ளது. இது, வரும் தேர்தலில், வெற்றிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என, தி.மு.க., கருதுகிறது.
எனவே, கூடுதல் தொகுதிகளை கேட்காமல், எங்களுடன் கூட்டணியில் தொடர்ந்தால், போட்டியிடும் தொகுதிகளில் முழு வெற்றி கிடைக்கும் எனக் கூறி, கூட்டணி கட்சியினரின் 'சீட்' பேரத்தை குறைக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
என்ன கொடுத்தாலும் விடியப் போவது இல்லை மக்களுக்கு. ஆகையால் திருட்டு விடியல் தமிழகத்தை விட்டு ஓடும் காலம் வெகு விரைவில் வரும்.
இதை சமாளிக்க பிஜேபி தரப்பில் பெட்ரோல் விலை 70 இக்கும் காஸ் விலை 600 இக்கும் குடுக்கலாம் as promissed earlier in 2014. மக்கள் NDA கூட்டணிக்கு வாக்கு செலுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. 15 லட்சம் வேண்டாம் ஏனென்டால் அதை அவர்கள் சொல்லவில்லை.
சூப்பர்
People have no clue about from where these amounts are coming. All they want is free money, besides FREEBIES. Why voters are NOT realizing this, and still expecting more concessions, to suffer till the next elections.
கூட்டணி கட்சிக்கு செக் செக்கில் எவ்வளவு தொகை போடவில்லையா blank செக் கொடுத்தாங்களா
வாக்காளர்களுக்கு 5000 ரூபாய் என்றால் கோதனி கட்சிகளுக்கு தலா 50 கோடி . டீல் ஓவர்
பணத்தை கொடுத்தால்
வரும் 2 வாரங்களில் டாஸ்மாக் சாராயம் மற்றும் பீர் விற்பனை மிக மிக அதிகமாக இருக்கும் ,
வாங்கிய கட்சிக்கார குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் டாஸ்மாக் செல்வார்கள்
மக்களின் இயலாமையை ஓட்டுக்கு பயன் படுத்துகிறார்கள். கையேந்தும் நிலையிலேயே கடந்த ஐம்பது ஆண்டுக்கு மேலாக வைத்துள்ளனர். இதுதான் கழகங்களின் சாதனை.
கையேந்த வில்லை. நீங்கள் எந்த கட்சி என்று தெரியவில்லை. உங்கள் கட்சியில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பீர்களா.
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் -தூய்மை பணியாளர்கள் செவிலியர்கள் என ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிமையான தொகையை போராடி தான் பெற வேண்டிய நிலையில் தமிழக மக்களை வைத்திருக்கிறது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் திடீரென அரசு நிதியிலிருந்து ரூ. ஐந்தாயிரம் மகளிருக்கு உரிமை தொகை என்ற பெயரில் நேற்று கொடுத்திருப்பது தி.மு.க.வினரின் தவறான அணுகுமுறை.
வேறு எந்த கட்சிக்கும் இத்தகைய தொகையை கொடுக்க இயலாது என்பதை நன்கு உணர்ந்தே ஒட்டு மொத்த தமிழக மக்களின் வரி பணத்திலிருந்து வெறும் 1.31 கோடி மகளிருக்கு மட்டும் வாரி வழங்கி தானே தி.மு.க. வழங்கியதாக மக்களை நம்ப வைத்து நற்பெயரை தேடிக்கொள்ள முயல்வதை
தமிழக மக்கள் புரிந்து கொள்ளாதது வேதனை மட்டுமல்ல, இப்படிப்பட்ட தொகையை அவர்கள் பெற்று கொள்வதும் நியாயமற்றது. இந்த செயலை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.
என்ன செய்டாலும் தலை கீழாய் நின்றாலும் தி மு க விற்கு 20 சீட்க்கு மேல் தேறாது .மேலும்
-
இன்றைய நிகழ்ச்சி
-
மானாமதுரை கோயிலில் பிப்.22ல் தேர் வெள்ளோட்டம்
-
சிவராத்திரியையொட்டி எலுமிச்சை பூஜை பொருட்கள் விலை கடும் உயர்வு
-
விஜயபுரி ஸ்ரீஜெய யோக க்ருஷ்ணர் கோவிலில் முதல் முறையாக இன்று சிவராத்திரி வழிபாடு
-
ரேஷன் கடைகளில் தேங்கிய சாக்குகள் கொண்டு வந்த ஊழியர்கள் ஏமாற்றம்
-
சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்: 3 பேர் மயக்கம்