வாழ்க்கையில் வெற்றிக்கு இவை மிகவும் அவசியம்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அட்வைஸ்

2

சண்டிகர்: ''வாழ்க்கையில் வெற்றிக்கு கடின உழைப்பு, தெளிவான இலக்கு, ஒழுக்கம் ஆகிய மிகவும் அவசியம்'' என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.


ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சூர்ய காந்த் பேசியதாவது: வாழ்க்கையில் வெற்றிக்கு கடின உழைப்பு, தெளிவான இலக்கு, ஒழுக்கம் ஆகிய மிகவும் அவசியம். அதேபோல், நேர்மை, சமூகம் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை மிக முக்கியமானவை.


மாணவர்கள் ஒழுக்கம், நீதித்துறை மற்றும் அரசியலைப்பு சட்டம் குறித்து நன்கு தெரிந்து விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு சூர்யகாந்த் பேசினார். அவர் பல்கலைக்கழகம் வளாகத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை எடுத்துரைத்தார்.

அவர் பல்கலை வளாகத்தின் பசுமையான மற்றும் சுத்தமான சூழலைப் பாராட்டினார்.

Advertisement