எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம்: உக்ரைன் அதிபர் புலம்பல்
கீவ்: ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம் தருகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெலனஸ்கி கூறியதாவது: பேச்சுவார்த்தையில் ரஷ்யா என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது முறையல்ல. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே தொடர்ந்து சமரசம் செய்ய வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தருகிறது.
உக்ரைன் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டுமா? ஜெனீவாவில் பிப்ரவரி 17,18ம் தேதி நடக்க உள்ள முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜெனீவாவில் நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டங்களுக்கு முன்னதாக, அதிபர் டிரம்பின் தூதர்களுடன் உரையாடினேன். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடனான எங்கள் சந்திப்பு குறித்தும் நான் பேசினேன். இவ்வாறு ஜெலனஸ்கி கூறினார்.
உக்ரைன் மக்கள் இன்னும் இவரை எதற்கு விட்டு வைத்து இருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.... அடுத்த நாட்டுக்காரன் பேச்சை கேட்டு சொந்த நாட்டு மக்களையே அழித்து விட துணிந்த பாவி இவனர்.
இதுதானய்யா அமெரிக்க தந்திரம் என்பது குரங்கு ஆப்பம் கதைப்போன்றே டிரம்பு செய்துள்ளார் மத்தியஸ்தம் என்று சொல்லி சொல்லி, அதிலே ஆதாயம் தேடுபவர்தான் அமெரிக்க அதிபர் இப்போதாவது தெரிந்து கொண்டு, பேசாமல் திரும்ப ரஷ்யாவுடனேயே நேரிலேயே பேச்சு வார்த்தையில் சமரசம் செய்துகொண்டால் மேலும் உமக்கு இழப்பு இருக்காது
ரஷ்யா நேட்டோவில் இணைய மாட்டோம். அமெரிக்கா படைகளின் தளம் உக்ரைனில் அனுமதிக்கமாட்டோம் என்கின்ற உறுதி மொழிகள் மட்டுமே கேட்டது. இதை வைத்து ரஷ்யாவிடம் நிறைய காரியங்கள் சாதித்திருக்கலாம். கெடுத்துக்கொண்டு விட்டனர். இணக்கமான சென்றிருக்கலாம். ஆனால் அமெரிக்கா அப்படியல்ல. பால் குடித்த மடியினையே அறுப்பவர்கள்.
நீ அவர்கள் மடியில். ஆனால் ரஷ்யாவோ யார் கண்ட்ரோளிலும் இல்லை. பின் ட்ரம்ப் என்ன செய்வார். பாச்சாவை தான் அடக்க பார்ப்பார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட
பெரும்பாலான உக்ரேனியர்கள் போலந்து மற்றும் பிற அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். அங்குள்ள விபச்சார விடுதிகளில் மற்ற நாட்டு பெண்களை விட உக்ரேனிய பெண்களே அதிகம் நிறைந்திருக்கின்றனர் என்கிற உண்மை இந்த காமெடியன் ஜெலன்ஸிக்கு தெரியுமா?
புதிய சிவில் சட்டத்தின்படி, உக்ரைன் 14 வயதிலிருந்தே திருமணத்தை அனுமதிக்கும். எப்ஸ்டீன் ஊழல் விவகாரத்திற்கு மத்தியில், உக்ரேனியப் பெண்கள் 14 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளவும் திருமணம் செய்துகொள்ளவும் ஜெலென்ஸ்கி அனுமதிக்க விரும்புகிறார். இதை நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உக்ரைனில் உள்ள யதார்த்தம். பாலியல் குற்றவாளிகள் உக்ரைனைத் தங்களின் தளமாக மாற்றி வருகின்றனர்.
யார் அழுத்தத்தில் போரை தொடங்கினீர்களோ அவர்களிடமே போய் அழுங்கள்
ரஷ்யாவிடம் பெரியண்ணன் பாச்சா எடுபடாது. அதனால் தான் உக்ரைனை மிரட்டுகிறார்?
நேட்டோவுடன் சேர நினைப்பதை முதலில் நிறுத்து. உன்னுடைய பிடிவாதாம்தான், உக்ரேனின் இத்தனை அழிவுக்கும் காரணம்.
ரஷ்யாவுக்கு அடிபணிந்தால் உக்ரேன் மக்கள் உன்னைத் தூக்கியடித்துவிடுவார்கள். அமெரிக்காவுக்கு அடங்கவில்லைன்னா அவங்களும் கைவிட்டு விடுவார்கள். இரண்டும் நடக்காட்டியும் ரஷ்யா உம்மை அழித்து விடும். எப்படியும் தப்பிக்க வழியில்லை. மற்ற நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்டையைப் போடுறதுதான் இரண்டு பெரியண்ணன்களின் நோக்கம்.மேலும்
-
அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
-
என்னை மாதிரி நன்கு படிக்க வேண்டும் என்கின்றனர்!
-
வள்ளலாரை ஈ.வெ.ரா.,வுடன் ஒப்பிடுவதா?
-
சசிகலா தனிக்கட்சியா? 'நோ கமென்ட்ஸ்'
-
தி.மு.க., கூட்டணியில் ஐந்து தொகுதிகள் கேட்கிறது மனித நேய மக்கள் கட்சி
-
என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்