எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம்: உக்ரைன் அதிபர் புலம்பல்

11

கீவ்: ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம் தருகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி இருக்கிறார்.


இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெலனஸ்கி கூறியதாவது: பேச்சுவார்த்தையில் ரஷ்யா என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது முறையல்ல. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே தொடர்ந்து சமரசம் செய்ய வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தருகிறது.

உக்ரைன் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டுமா? ஜெனீவாவில் பிப்ரவரி 17,18ம் தேதி நடக்க உள்ள முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜெனீவாவில் நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டங்களுக்கு முன்னதாக, அதிபர் டிரம்பின் தூதர்களுடன் உரையாடினேன். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடனான எங்கள் சந்திப்பு குறித்தும் நான் பேசினேன். இவ்வாறு ஜெலனஸ்கி கூறினார்.

Advertisement