என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே போர் நடந்தபோது, இலங்கை வன்னிக்கு நான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜிவ், இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தார். இலங்கையில் நான் இருந்தபோது எனக்கு இரண்டு அடி முன்னால் பீரங்கி குண்டு விழுந்தது. இயற்கை அன்னை அளித்த வரத்தால் போர் பூமியில் இருந்து தப்பினேன். கடந்த காலங்களில் நான் செய்த ஏராளமான பிழைகளால், என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது மன்னிக்க முடியாத முடிவானது. இதனால், இமயம் என இருந்த நான் படுபாதாளத்துக்கு சென்றேன். அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கட்சியினருக்கு வழங்கினேன். சினிமா நடிகருக்கு இணையான கூட்டம் எனக்கு வந்தது. ஆனால், பல்வேறு தோல்விகளால் கூட்டம் குறைந்தது.



- வைகோ

பொதுச்செயலர், ம.தி.மு.க.,

Advertisement