தமிழகத்தை உலுக்கிய விபத்து; தூத்துக்குடியில் பைக் மீது சுற்றுலா வேன் மோதியதில் 5 பேர் பலி

5

தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் சேர்ந்த குருசாமி(40), முத்துலட்சுமி (48), சுமித்ரன் (3), முகில் (5) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் ஆகியோர் பைக்கில் குளத்தூரில் இருந்து பல்லாவரம் கிராமத்திற்கு

சென்று கொண்டிருந்தனர்.


அப்போது கிழக்கு கடற்கரை சாலையில், சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த சுற்றுலா வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


உயிரிழந்த ஐந்து பேரின் உடலை மீட்ட குளத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா வேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement