இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
சென்னை: 'இந்தியாவில், 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 1983ம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய இலங்கை தமிழர்களுக்கு, மத்திய அரசின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடன் தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
தற்போது, 89,000 பேர் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். அவர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். அவர்களுக்கு குடியுரிமை அல்லது நீண்ட கால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள், தற்போது வரை கிடைக்கவில்லை. இதற்கு, பழைய நடைமுறை தடையாக உள்ளது. அதை நீக்க வேண்டும்.
மாவட்ட அளவில் உள்ள அலுவலகங்கள், குடியுரிமை மற்றும் நீண்ட கால விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும். கடந்த 2015 ஜனவரி 9ம் தேதி வரை, இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை, 'சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதக்கூடாது' என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும்
-
திமுக எம்பி டிஆர்பாலு மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை அறிவிப்பு
-
நீதிபதி மீது அரிவாள் வீச்சு... நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
நடிகை திரிஷா குறித்த பேச்சு: நயினார் நாகேந்திரன் வருத்தம்
-
தமிழக பொருளாதாரத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு குறைவு; ஜெயரஞ்சன்
-
வங்கக் கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் பிப்ரவரி 21,22ல் மழைக்கு வாய்ப்பு
-
நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு