நடிகை திரிஷா குறித்த பேச்சு: நயினார் நாகேந்திரன் வருத்தம்
சென்னை: நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
@1brதமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சில நாட்களுக்கு முன்பாக, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில் திரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அரசியலில் உயர்ந்த நிலை வகிக்கும் ஒருவரின் இழிவான மற்றும் அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சி உடனும் தொடர்பில் இல்லை. அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. இதற்கு முன்பும் தொடர்ந்து தெரிவித்ததுபோல், அரசியல் விவகாரங்களில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறேன்.
என்னுடைய கலைத் திறமையால் மட்டுமே என்னை மதிப்பிட வேண்டும்; அரசியல் தொடர்புகள் என்ற குற்றச்சாட்டுகளால் அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் விவாதப் பொருளாக்கக் கூடாது என்பது பொதுவான நெறிமுறை. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புணர்ச்சியுடனும் சமநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும். எனது பெயரை எனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் இழுக்க வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் திரிஷா கூறியுள்ளார்.
வருத்தம்
இதனிடையே, நெல்லையில் நிருபர்களை சந்தித்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:எனது அரசியல் வாழ்க்கையில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வந்தது இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த வார்த்தை. இது குறித்து வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோர் என்னிடம் பேசியிருந்தனர். இந்த விவகாரத்தில் யாரேனும் வருத்தப்படுவர்களே ஆனால், அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (17)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
16 பிப்,2026 - 21:46 Report Abuse
விஜய்யை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள். திராவிட சித்தாந்தம் இன்னும் போகவில்லை. விஜயை விட த்ரிஷா புத்திசாலி. வருங்காலத்தில் முதல்வர் ஆகும் தகுதி கொண்டவர். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
16 பிப்,2026 - 21:03 Report Abuse
தங்கள் குடும்பத்து பெண்களையும் மனதில் வைத்து, அரசியல்வாதிகளுக்கு பேச்சில் கண்ணியம் தேவை. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
16 பிப்,2026 - 19:53 Report Abuse
நயினாருக்கு அந்த திராவிடக் கட்சிகளுக்கே உரித்தான பழக்கம் - 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
16 பிப்,2026 - 19:13 Report Abuse
பிஜேபி தலைவருக்கு சற்றும் பொருத்தமில்லாத அநாகரீக பேச்சு. தேர்தல் நெருக்கத்தில் கவனமாக இருக்கவேண்டும். 0
0
Reply
Moorthy - ,இந்தியா
16 பிப்,2026 - 18:27 Report Abuse
இப்போதான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 3 வருஷம்..... 0
0
Reply
கூத்தாடி வாக்கியம் - ,இந்தியா
16 பிப்,2026 - 17:30 Report Abuse
மூன்றாம் தர பேச்சாலர்களின் பேச்சை தலைவர் பேச கூடாது 0
0
Reply
bharathi - ,
16 பிப்,2026 - 17:05 Report Abuse
What to do he is from dravidian stock highly inmatured and perverted thinking ...cant Annamalai ji...the delhi must regret 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
16 பிப்,2026 - 16:59 Report Abuse
திரிஷாவையும் விஜையையும் தொடர்பு படுத்தி???இதில் தவறு ஒன்றுமே இல்லை???எல்லாநடிகைகளுக்கும் எல்லா நடிகரிடம் தொடர்பு கட்டாயம் நேரம் பணம் கிடைக்கும் பட்சத்தில் 0
0
Reply
அன்பே சிவம் - ,
16 பிப்,2026 - 16:10 Report Abuse
1). நைனார் சொன்னது போன்று தான் தமிழகம் முழுவதும் உள்ளது talk டாக் now இப்போது.
2). உண்மை என்னவென்று விஜய் குடும்பத்தினர் மற்றும் திரிஷா குடும்பத்தினர் தான் பொது வெளியில் விளக்கம் கொடுக்க வேண்டும்.
3). அதேசமயம் நைனார் தான் திருநெல்வேலயில் பல ஆண்டுகளாக தனது ஓட்டலில் Bar பார் நடத்துவது பற்றியும் பேச வேண்டும்.
4). ஆக நைனார் மற்றும் விஜய் இரண்டு பேரும் அரசியல் வாழ்கையில் தலைவர்களாக இருக்க தகுதி இல்லாத மனிதர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை 0
0
Reply
saravan - bangaloru,இந்தியா
16 பிப்,2026 - 15:40 Report Abuse
இந்த புள்ள பாவம்பா
தப்பு செய்யாது
வேணா இன்றைய நவீன யுகத்தில்
எத்தனையோ சோதனைகள் உள்ள
அவர் திருமணமாகாதவர் சோதிச்சி பார்த்துக்கோங்க
அவ்வளவுதான் 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement