பஞ்சரான டயரும் பங்ஷனாகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் ஓடவே ஓடாது: உதயநிதி விமர்சனம்
தஞ்சாவூர்: “பா.ஜ., கூட்டணியில் உள்ள பஞ்சரான டயர்களும், பங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் என்றைக்கும் ஓடவே ஓடாது,” என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று நடந்த தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அடிக்கடி சங்கி கூட்டம் வரும்; மோடி, அமித் ஷா வருவர். தமிழகத்திற்கு தேவையான நிதி மட்டும் வராது.
உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில் மோடி, அமித் ஷாவின் பருப்பு வேகலாம்; ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் வேகாது.
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தலைவர்களை யோசித்து பாருங்கள். 'பழனிசாமியுடன் கூட்டணியில் இருப்பதற்கு, துாக்கில் தொங்கி விடலாம்' என ஒருவர் கூறினார். 'பழனிசாமிக்கு கவுன்சிலராக வரக்கூட தகுதி கிடையாது' என மற்றொருவர் கூறினார்.
இந்த கூட்டணியை வைத்துக் கொண்டு, 'தமிழகத்திற்கு டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும்' என பிரதமர் மோடி கூறுகிறார். மோடி அவர்களே, உங்கள் கூட்டணி வண்டியை பாருங்கள், கூட்டணியில் அனைவரும் பஞ்சரான டயர்கள்.
உங்களுடைய பஞ்சரான டயர்களும், பங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் என்றைக்கும் ஓடவே ஓடாது.
இவர்கள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம், யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டியினர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமலும், தெரியாமலும் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். அரசியல் ஒரு என்டர்டெயின்மென்ட் என்று நினைத்துக் கொண்டுள்ளனர்.
அரசியல் என்பது மக்கள் பணி. கமிட்மென்ட், டெடிகேஷன் இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது. பாசிசத்தையும், அடிமைத்தனத்தையும் தி.மு.க.,வினர் விரட்ட வேண்டும்.
டில்லிக்கும், தமிழகத்திற்கும் நடக்கும் போரில், தமிழகம் என்றும் டில்லிக்கு தலைகுனியாது. அரசியல் அறிவே இல்லாத அடிமைகளும் அட்டை கத்திகளும் புலம்பினாலும், வெற்றி பெறுவது உதயசூரியன் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று ஒரு சிறிய மேம்பாலம் திறந்து உலக மஹாசாதனை போன்று பீற்றிக்கொண்டனர். அதே சமயம் மிக பெரிய பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேல் மோடி திறப்பு. பார்க்கவே பிரமிப்பு. கங்கை கங்கைதான். கூவம் கூவம்தான்
தங்களைப் பற்றி தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள்.
பஞ்சரான டயரை பஞ்சர் ஒட்டி சரிசெய்தல் பழுதடைந்த டப்பா எஞ்சினை அகற்றி புதிய எஞ்சின் நிறுவி வாகனங்களை ஓட்டுவது வழக்கம் என உமக்கு தெரியாதா உதயநிதி?
இப்போ டெக்னாலஜி மாறிப்போச்சு...இஞ்சின் இல்லாத பேட்டரி வண்டி ட்யூப்லெஸ் டையர்லயும் வண்டி சூப்பரா ஓடும் என்று கத்துக்குட்டிக்கு தெரியாது...
தலைமை அமைச்சரை போல, இவரும் தரம் தாழ்ந்து பேசுகிறார். இந்த குடும்பமே இப்படித்தான் போலும்.
இது சினிமா இல்லை வசனம் பேச. தகுதியில்லாத வர்கள் ஐ உட்கார வைத்தால் இப்படித்தான். திமுக தொண்டர்கள் பாவம்.
உதயநிதி சினிமா டயலாக் பேசாம உங்களுடைய ஊழல் தகர டப்பாவை ஒரு ஒழுக்கமான கட்சியா மாற்ற முயற்சி எடுங்க.
திமுக ஆட்சியை விட்டு ஓடும். கருணாநிதி குடும்பம் ஓங்கோலை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடும். நாங்க பாஸிடிவாதான் இருக்கும்.
டீக்கடை அரட்டையில் காமெடி பண்றவன்லாம் துணை முதல்வர். அசத்திய சோதனை.
இவங்க ஆட்சியில் ரிப்பேர் ஆகி நடுவழியில் நிற்கும் டப்பா பஸ்களை தான் இவர் கலாய்க்கிறார். அப்பாவுக்கு ஏத்த மகன் இவர்.மேலும்
-
விதிகளை மீறிய மேற்கு வங்க அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி
-
த.வெ.க.,வுடன் கூட்டணி; காங்கிரசார் வலியுறுத்தல்
-
சுனைலிங்கம் ஜலகண்டேஸ்வரர் தரிசனம்
-
வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு
-
பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
-
விதிமீறும் வாகன ஓட்டுனர்கள் சுரங்கப்பாதையில் விபத்து அபாயம்