ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஏஐ தொழில்நுட்ப துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த சர்வதேச உச்சிமாநாட்டை புதுடில்லியில் இன்று (பிப்ரவரி 16) மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இந்தியா சார்பில் ஏஐ உச்சிமாநாடு நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டிற்கு உலகெங்கிலும் உள்ள உலகத் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.
ஏஐ தொழில்நுட்பம் இன்று சுகாதாரம், கல்வி, விவசாயம் உட்பட பல துறைகளை மாற்றியமைத்து வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நமது நாடு ஏஐ தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ளது. டிஜிட்டல், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் அதிநவீன ஆராய்ச்சி நிறுவனங்கள் வரை, ஏஐ துறையில் நமது முன்னேற்றம் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
AaaAaaEee - Telaviv,இந்தியா
16 பிப்,2026 - 18:30 Report Abuse
ஆமாம்பா ஆமாம் கொள்ளை, கொலை, ஏமாற்று, பசி & பட்டினி, குப்பை இப்படி எல்லாத்திலேயும் தான். 0
0
Barakat Ali - Medan,இந்தியா
16 பிப்,2026 - 20:00Report Abuse
நீங்க எந்த நாட்ல இருக்கிறீங்க ???? 0
0
Reply
Vasan - ,இந்தியா
16 பிப்,2026 - 13:41 Report Abuse
Tamilnadu is leader in Artificial Intelligence, Scientific corruption, etc. 0
0
Reply
அசோகன் - ,
16 பிப்,2026 - 12:08 Report Abuse
என்னது AI யா இதப்பத்தி ஆல்ரெடி told பார் எங்க முதல்வர்... 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
16 பிப்,2026 - 11:13 Report Abuse
நாணயத்திற்கு இரு பக்கம் உள்ளது 0
0
SUBBU,MADURAI - ,
16 பிப்,2026 - 11:30Report Abuse
சரி இப்ப அதுக்கு என்னாங்கிற சொல்ல வந்ததை முழுசா சொல்லுங்க... 0
0
Barakat Ali - Medan,இந்தியா
16 பிப்,2026 - 20:04Report Abuse
... காங்கிரஸ்தான் இதுக்கெல்லாம் காரணம் ன்னு மோடியே ஒரு வரி சேர்த்துச் சொல்லியிருந்தா கிருஷ்ணர் கோபப்பட்டிருக்க மாட்டாரு ..... 0
0
Reply
மேலும்
-
தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
-
தகவல் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!
-
இபிஎஸ்சை வீட்டில் சென்று சந்தித்த மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன்!
-
அடுத்த தலைமுறை விமான இன்ஜின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங்
-
அதிமுக சின்னம் குறித்த வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி
Advertisement
Advertisement