கொலை மிரட்டல் : ஒருவர் கைது

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை அருகே கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

அவலுார்பேட்டை அடுத்த நொச்சலுார், தாதங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 51; அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பாபு, 26; பரசுராமன், 29; இவர்களுக்கிடையே வீட்டு மனை பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த வாழை மரத்தை முருகன் வெட்டியுள்ளார்.

இதனை கடந்த 17ம் தேதி இரவு 9;00, மணிக்கு பாபு, பரசுராமன் ஆகியோர் முருகனை தட்டிக்கேட்டு கத்தியால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் நேற்று 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து பாபுவை கைது செய்தனர்.

Advertisement