ஆடவல்லீஸ்வரர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (22ம் தேதி) நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் 1400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (22ம் தேதி) நடக்கிறது.
விழாவையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜை தொடங்கியது. இன்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:30 மணி முதல் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.
தொடர்ந்து நாளை 22ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 11:00 மணிக்கு ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். 11:20 மணிக்கு மூலஸ்தான பஞ்சமூர்த்திகள் மகா கும்பாபிஷேக தீபாராதனை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாமதுரைக்கு மேலும் இரண்டு பாலங்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா வாழ்த்தும்; அமைச்சர் ரகுபதி
-
இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும்; அமித்ஷா உறுதி
-
பாஜவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது; திருமாவின் இன்றைய குறி!
-
ஏஐ., பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு மீது உலகநாடுகள் முழு நம்பிக்கை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கு; பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்
Advertisement
Advertisement