ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கு; பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்
தானே: ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம், பிவாண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தே,ர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மஹாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் உள்ளது என்றார். அவரின் இந்த பேச்சு நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி பிவாண்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ராஜேஷ் குண்டே என்ற ஆர்எஸ்எஸ் தொண்டர் அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
இந் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது ஜாமீனுக்கான புதிய பிரமாண பத்திரம் ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர் ராகுல் புறப்பட்டு சென்றார்.
வழக்கு விசாரணையில் இருந்து ஆஜராக ராகுலுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால், இனி அவர் நேரிடையாக ஆஜராக வேண்டியது இல்லை.
ஆஜராவதில் விலக்கு ஏன் ?கோர்ட்டின் கேவலம்
அதில் என்ன சந்தேகம்
உங்க அப்பாவையும் பாட்டியையும் சுட்டு கொன்றவர்களை பற்றி பேச முடியுமா.மேலும்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்
-
கோவை ஏர்போர்ட் விரிவாக்கம் 2028ல் நிறைவேறுவது சாத்தியமா?; கலெக்டர் புறக்கணிப்பால் தொழில் அமைப்புகள் அப்செட்
-
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
-
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை ; விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா