காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே காரில் மது பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார், நேற்று காலை கெங்கராம்பாளையம் செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரி பகுதியிலிருந்து வந்த ஒரு காரை சோதனை செய்ததில் விழுப்புரத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
விசாரணையில், காரில் வந்தவர்கள் புதுச்சேரி மாநிலம், பங்கூர், செல்வா நகரைச் சேர்ந்த பாலசுந்தரம், 54; சின்னையன்பேட்டை கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், 40; என்பதும் தெரிந்தது.
இதனையடுத்து, விழுப்புரம் மதுவிலக்கு போலீசார், இருவரையும் கைது செய்து, 1,200 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வில் சேர வந்த அழைப்புக்கு ஓ.பி.எஸ் மறுப்பு!
-
மிதக்கும் சூரிய மின்சார உற்பத்தி திட்டம் நீர்நிலைகளை அடையாளம் காண வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
-
அமெரிக்க கோர்ட் தீர்ப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை
-
மதுரை எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாக்கிள் இன்போடெக் துவக்கம் 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
-
சுற்றுலா திட்டங்களுக்கு தமிழக அரசு டெண்டர்
-
தமிழக அரசை கண்டித்து பா.ஜ., இளைஞரணி ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement