திருப்பதி பாதயாத்திரை குழு 36வது ஆண்டு நடைபயணம் துவக்கம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் சார்பில் 36வது ஆண்டு நடைபயண துவக்க விழா நடந்தது.

திருக்கோவிலுார், திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் தலைவர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில், ஆண்டு தோறும் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் சன்னதியில் துவங்கி, நடைபயணமாக பக்தர்கள் பலரும் திருப்பதிக்கு யாத்திரை சென்று வருகின்றனர்.

அதன்படி, 36 வது ஆண்டு திருமலை திருப்பதி பாதயாத்திரை உலக அளந்த பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கியது. கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடைபயணமாக திருமலை திருப்பதி புறப்பட்டனர்.

Advertisement